Showing posts with label tamil stories in tamil. Show all posts
Showing posts with label tamil stories in tamil. Show all posts

பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. "நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்றது.

"நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை" என்றது கொக்கு.

"மனசு சரி இல்லையா... ஏன்?' என்றது மீன்.

"அதைஏன் கேட்கிறாய்..." என்று பிகு பண்ணியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்"

"சொன்னால் உனக்குத் திக் என்றாகும்."

மீனுக்குப் பரபரத்தது.

"சொன்னால்தானே தெரியும்"

"வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்..." என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே"

"என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்."

"அய்யய்யோ!"

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

"நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

"அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

"ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்" என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு "பக்"கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

"கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்" என்றது நண்டு.

"அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?"

"எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன."

"ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்" என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.


முந்தைய பகுதிகள்

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இற...

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் ௨

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

பிடித்திருந்தால் ஓட்டு போடவும்

http://ta.indli.com/site/tamilpadaipugal.blogspot.com

தமிழ்படைபுகள் - ஜூலை மாத படைப்புகளின் தொகுப்பு!

முதல் படைப்பு: கணினி தமிழ்

தமிழக வரலாறு

பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்

இன்றொரு தகவல்: youtube.com இணையதளத்தில் அதிகம்பேர் கண்டுகளித்த காணொளி

தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

இன்றொரு தகவல்: உலகிலே மிக உயரமான கட்டிடம் எது?

தலைவலி தீர பத்து ஆலோசனைகள்

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

தெனாலிராமன் கதைகள்! ராஜகுருவின் நட்பு ஏற்படுதல்

இன்றொரு தகவல்: சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது?

இந்திய கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைக்கு கரிசனம் காட்டுகிறது சீனா:அமெரிக்க செனட்

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - யூவராஜாவிடம்

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

தெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல்

இன்றொரு தகவல்! நிலா மற்றும் பூமி உருவானது எப்படி?

தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழிக்குப் பழி வாங்க...

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

இன்றொரு தகவல்! பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது...

இன்றும் துடிக்கின்றன...

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி


உண்ணாநோன்பு மருத்துவம்

இந்தோனேஷியாவில் மவுண்ட் லோகன் எரிமலை வெடிப்பு

இறு‌தி‌ப்போ‌ரி‌ல் மனித உரிமை மீறல் புகார்களை இல‌‌...

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர...

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் ...

பஞ்சதந்திரக் கதைகள்

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்ட...

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?


சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டார் விஜயகாந்த்

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் 2

தெனாலிராமன் கதைகள் - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது - வீரமங்கை கல்பனா சால்வா

இலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்ப்பாட்டம்

பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார்

தெனாலிராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இறந்த குரங்கின் கதை


ஒரு குழந்தையின் பாசம்! துடிப்பு! ஆத்திரம்!

மாத்தியோசி - சிறுகதை

தெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்

செம்பருத்தியின் மருத்துவக் குணம்

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

மனைவி அமைவதெல்லாம்! - சிறுகதை

மனைவி அமைவதெல்லாம்! - சிறுகதை

உலகப் புகழ்பெற்ற கவிஞர் ஜான் மில்டன் (1608 – 1674) வருடங்களில் வாழ்ந்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வியாதியால் கண் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் அவர் அமரத்துவமான ஆங்கிலக் கவிதைகளை எழுதினார்.

ஆங்கில இலக்கியத்தில் அவரது கவிதைகள் இன்றும் பெரிய பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரிடம், “”உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி சில விபரங்களைக் கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மில்டன், “”என்னுடைய படைப்புக்களே உங்களுக்குத் தேவையான விபரங்களைத் தரும் என்று கருதுகிறேன். இருந்தாலும் சில விஷயங்களைச் சொல்லுகிறேன். எனக்குத் திருமணமாகி என் மனைவி வீட்டுக்கு வந்த பின், நான் எழுதிய நூலின் பெயர் இழந்த சொர்க்கம். என் மனைவி இறந்து நான் தனி மனிதனாகிவிட்ட பிறகு நான் எழுதிய நூலின் பெயர் திரும்பப் பெற்ற சொர்க்கம்,” என்றார்.

மனைவி சரியில்லாததால் அவர் அடைந்த துன்பம் எத்தகையது என்பதை உணர்ந்த அவரது நண்பர் மனம் வருந்தினார். இருந்தாலும் அந்த வேதனைகளையே சாதனையாக மாற்றிவிட்ட அவரது திறமையை என்னவென்று சொல்வது?

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

ஒரு பெரிய மரம்.

அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.

ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

ஒருநாளா... இரண்டு நாளா பலநாள்!

காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்?

அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா?

ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.

நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.

"அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.

"போட்டால்...?"

"போடு முதலில். அப்புறம் பார்". என்றது.

காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை.

ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

இருந்த அரசகுமாரியின் செடிகள் - 'ஆ' காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது' என்று கத்தினர்.

உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.

காக்கை மெதுவாக - அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.

'அப்புறம் பார்' என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.

சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More