Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

பாரதிதாசன் கவிதைகள் "இசையமுது - தமிழ்"

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழ

நன்றி....

பிடித்திருந்தால் ஓட்டு போடவும்

http://ta.indli.com/site/tamilpadaipugal.blogspot.com



இன்றும் துடிக்கின்றன...

இன்றும் துடிக்கின்றன...

மலர்ந்த மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...

இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...

மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
உங்கள் அரசுகள்
குழந்தைகளை
எப்போது கொண்டாடும்?

எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை
வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...


8 வருடங்கள் ஆகியும் இந்த வழக்கிற்கு கூட இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை... என்ன ஒரு வெட்கக்கேடு...


கண்ணீருடன்
குழந்தைகளே!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More