Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

தயாநிதி மாறனுக்கு அடுத்து லல்லு பிரசாத் யாதவ்? 2G Scam News in Tamil

தயாநிதி மாறன் மத்திய மந்திரி பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த பதவி யாருக்கு கிடைக்கும் என்று பரபரப்பாக டெல்லியில் இருந்து செய்திகள் தொலைகாட்சியின் மூலமாக வந்தவண்ணம் உள்ளன, முன்னால் மதிய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி ஆர் பாலுவுக்கு இந்த பதவி கொடுக்கப்படும் என்று முன்பு செய்திகள் வந்தன. ஆனால் பிரதமருக்கு டி ஆர் பாலுவிடம் அந்த பதவியை கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது, தி மு க வும் நாங்கள் யாரும் அடுத்த மந்திரி பதவிக்காக சோனியாவிற்கு கடிதம் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி நாளை சனிக்கிழமை கருணாநிதியை சந்திக்கிறார். இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்ககூடும் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அப்படி வேறு கட்சியை சேர்ந்த யாருக்காவது அப்பதவியை கொடுத்தல் இரு கட்சிகளுக்கும் உள்ள உறவு பாதிக்குமா?

இல்லை அடுத்த இலக்காக அழகிரின் பதவி பறிக்கப்படும் வரை திமுக அமைதி காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

இது செய்தி

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

என் கருத்து

எப்படித்தான் அந்த பணம் விழுங்கும் முதலை தயாநிதி மாறனுக்கு மனது வந்ததோ ராஜனாமா செய்ய யப்பா... அவர் ராஜனாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை பிரதமரே அவரின் அன்னை சோனியா காந்தியில் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி இருப்பார்.

இப்போது மொத்தம் மூன்று திமுக அமைச்சர்கள் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக தயாநிதிமாறனும் உள்ளே போவது உறுதி. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு எக்கச்சக்க ஆதாரங்கள் உள்ளது. இதில் முக்கிய ஆதாரம் aircell நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனின் நேரடி வாக்குமூலம்.
ஏற்கனவே சண் தொலைகாட்சியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளே இருக்கிறார். சண் குழுமத்தின் தலைவர் கலநிதிமாறனும் பல வழக்குகளில் சிக்கும் நிலைமை தற்போது நிலவுகிறது. ஏன் இவர்தான பெரிய பணம் விழுங்கும் முதலை... தமிழக கேபிள் நிறுவனமும் அரசாங்கத்தின் சொத்தாக்கப்படுகிறது. திமுக வின் ஆதரவும் அந்த அளவுக்கு இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. ஆகவே சன் குழுமத்திற்கு ஏழரை சனி ஆரம்பம்.

திமுக வின் நிலை என்ன

திமுகவை பொருத்தவரையில் தயாநிதிமாறனின் கைது ஒருபுரம் சோகமாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர திமுகவினர் அனைவருமே மேல்மட்ட தலைவர்களும்கூட இதை மகிழ்ச்சியாகவே கருதுகிறார்கள். ஏனெனில் இரண்டாம் அலைக்கற்றை ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதே சன் தொலைகாட்சிதான்.

ஊழலற்ற காங்கிரஸ்

மூன்று மதிய அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கயுள்ள போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருத்தருக்கு கூட இதில் பங்கில்லை என்று நினைக்கும் போது இதில் யார் முட்டாள் என்று எனக்கு தெரியவில்லை. தன கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மாட்டிக்கொண்ட பிறகும் காங்கிரஸ் கட்சியை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் திமுக முட்டாளா? இதிலும் மூன்று பேரில் ஒருத்தர் தன்னுடைய மகள். ஒரு பக்கமாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் முட்டாளா? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் முட்டாள்களா? மன்னிக்கவும் நீதிபதிகளை தவறாக எழுதியதற்கு. நன் அப்படி எழுதுவதன் காரணம், ஒரு அமைச்சரவையில் தப்பு நடக்கிறது என்பது அந்த அமைச்சரவையின் தலைவர் பிரதமருக்கு தெரியாதா? அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் அனுமதி இல்லாமல் இரண்டாம் அலைகற்றை வர்த்தகம் நடந்திருக்குமா? இதற்கு பிரதமர் போறுப்பாகமாட்டாரா? காங்கிரஸ் கட்சிகாரர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா?

ஆனால் இன்னும் இரண்டு வாரத்திற்குள் செட்டியார் பொம்மை சிதம்பரம் இந்தவழக்கில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது..

பிழை ஏதேனும் இருப்பின் தொடர்புகொள்க rajkumareco@gmail.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More