Showing posts with label கவிஞர் ஜான் மில்டன். Show all posts
Showing posts with label கவிஞர் ஜான் மில்டன். Show all posts

மனைவி அமைவதெல்லாம்! - சிறுகதை

உலகப் புகழ்பெற்ற கவிஞர் ஜான் மில்டன் (1608 – 1674) வருடங்களில் வாழ்ந்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வியாதியால் கண் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் அவர் அமரத்துவமான ஆங்கிலக் கவிதைகளை எழுதினார்.

ஆங்கில இலக்கியத்தில் அவரது கவிதைகள் இன்றும் பெரிய பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரிடம், “”உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி சில விபரங்களைக் கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மில்டன், “”என்னுடைய படைப்புக்களே உங்களுக்குத் தேவையான விபரங்களைத் தரும் என்று கருதுகிறேன். இருந்தாலும் சில விஷயங்களைச் சொல்லுகிறேன். எனக்குத் திருமணமாகி என் மனைவி வீட்டுக்கு வந்த பின், நான் எழுதிய நூலின் பெயர் இழந்த சொர்க்கம். என் மனைவி இறந்து நான் தனி மனிதனாகிவிட்ட பிறகு நான் எழுதிய நூலின் பெயர் திரும்பப் பெற்ற சொர்க்கம்,” என்றார்.

மனைவி சரியில்லாததால் அவர் அடைந்த துன்பம் எத்தகையது என்பதை உணர்ந்த அவரது நண்பர் மனம் வருந்தினார். இருந்தாலும் அந்த வேதனைகளையே சாதனையாக மாற்றிவிட்ட அவரது திறமையை என்னவென்று சொல்வது?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More