Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

தமிழகத்தில் அதிரடி! திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கைது!

முன்னால் துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் கைது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் கைது

நீதிமன்ற நிபந்தனைப்படி சேலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பேருந்துகள் உடைப்பு:

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

அவரது கைதுக்கு எதிராக சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து வருகின்றன. சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கைது

தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் இன்று அதிகாலை திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரும் நில மோசடி வழக்கிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் தியாகராய நகரல் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை, திருப்பூரில் இருந்து 10 வேன்களில் வந்த நூற்றுக்கும் அதிகமான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அளித்துள்ள புகார் தொடர்பாக, ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் திருப்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் பல லட்சம் மதிப்புள்ள மில் ஒன்றை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - யூவராஜாவிடம் சில கேள்விகள்

"வருகிற தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்" என்று வாரத்திற்கு இருமுறை பேட்டி கொடுக்கிறார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் 'யூத்து யூவராஜா'.

யூவராஜா அண்ணே நீங்க தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா. இல்லை எங்காவது வெளியூரில் சுற்றித்திருந்து கொண்டு விடுமுறைக்கு இங்கு வரும்போது இதுபோல் பேட்டி கொடுக்கிறீர்களா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை பார்த்தபின்பும் ஏன் இப்படி பேசுகிறீர்கள். திமுக தொண்டர்களின் ஓட்டு மட்டும் உங்களுக்கு விழவில்லை என்றால். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 101 ஓட்டுக்கள் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது இருப்பீர்கள். நீங்கள் ஒரு தேசிய கட்சி ஆகவே இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலையும் உங்களால் தனித்து போட்டி இட்டு ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது. தன்னுடைய மனைவிக்கு ஒரு தொகுதில் சீட் வாங்கி கொடுத்து பின் அவருக்கு "loly pop" வாங்கி கொடுத்த தலைவர் உங்கள் கட்சியில்தான் இருக்கிறார்.

கீழே நன் பட்டியல் இட்டு கட்டுவதை மனதார நாங்கள் அப்படி இல்லை என்று சொல்லிவிட்டு நீங்கள் தனியாக தேர்தலில் நில்லுங்கள்.. நானும் உங்கள் கட்சியில் சேர்த்து விடுகிறேன்.

1 சத்ய மூர்த்தி பவனில் உங்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் (அணைத்து கோஷ்டியினரும்) எதாவது ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக முடிவு செய்ய முடியுமா? உதாரனத்திற்க்கு இப்போது உங்கள் கட்சியின் தமிழக தலைவர் பதவி காலியாகத்தான் இருக்கிறது.

2 அப்படி நீங்கள் தேர்வு செய்து சண்டை போட்டுக்கொள்ளாமல், ஒருவருடைய வேஷ்டி கூட கிழியமால், சட்டை கூட கிழியாமல், உங்களால் சத்ய மூர்த்தி பவனில் இருந்து வெளில் வர முடுயுமா?

3 தமிழக நலனுக்காக தமிழர்கள் நலனுக்காக உங்கள் கட்சியில் எதாவது திட்டமுண்டா? அட உங்க கட்சியின் கொள்கைதான் என்னப்பா?

4 தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு உங்கள் கட்சியை சேர்ந்த ஒரு தலைவராச்சி மதிய அரசை கண்டித்தோ இலங்கையை கண்டித்தோ ஒரு இருக்கை விட்டதுண்டா?

அப்புறம் எப்படினா நீங்க தமிழ்நாட்டு தேர்தல்ல தனியா நிப்ப... பொய் ஒரு ஓரமா முட்டு சந்துல பொய் நில்லு...

தயாநிதி மாறனுக்கு அடுத்து லல்லு பிரசாத் யாதவ்? 2G Scam News in Tamil

தயாநிதி மாறன் மத்திய மந்திரி பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த பதவி யாருக்கு கிடைக்கும் என்று பரபரப்பாக டெல்லியில் இருந்து செய்திகள் தொலைகாட்சியின் மூலமாக வந்தவண்ணம் உள்ளன, முன்னால் மதிய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி ஆர் பாலுவுக்கு இந்த பதவி கொடுக்கப்படும் என்று முன்பு செய்திகள் வந்தன. ஆனால் பிரதமருக்கு டி ஆர் பாலுவிடம் அந்த பதவியை கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது, தி மு க வும் நாங்கள் யாரும் அடுத்த மந்திரி பதவிக்காக சோனியாவிற்கு கடிதம் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி நாளை சனிக்கிழமை கருணாநிதியை சந்திக்கிறார். இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்ககூடும் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அப்படி வேறு கட்சியை சேர்ந்த யாருக்காவது அப்பதவியை கொடுத்தல் இரு கட்சிகளுக்கும் உள்ள உறவு பாதிக்குமா?

இல்லை அடுத்த இலக்காக அழகிரின் பதவி பறிக்கப்படும் வரை திமுக அமைதி காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

இது செய்தி

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

என் கருத்து

எப்படித்தான் அந்த பணம் விழுங்கும் முதலை தயாநிதி மாறனுக்கு மனது வந்ததோ ராஜனாமா செய்ய யப்பா... அவர் ராஜனாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை பிரதமரே அவரின் அன்னை சோனியா காந்தியில் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி இருப்பார்.

இப்போது மொத்தம் மூன்று திமுக அமைச்சர்கள் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக தயாநிதிமாறனும் உள்ளே போவது உறுதி. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு எக்கச்சக்க ஆதாரங்கள் உள்ளது. இதில் முக்கிய ஆதாரம் aircell நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனின் நேரடி வாக்குமூலம்.
ஏற்கனவே சண் தொலைகாட்சியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளே இருக்கிறார். சண் குழுமத்தின் தலைவர் கலநிதிமாறனும் பல வழக்குகளில் சிக்கும் நிலைமை தற்போது நிலவுகிறது. ஏன் இவர்தான பெரிய பணம் விழுங்கும் முதலை... தமிழக கேபிள் நிறுவனமும் அரசாங்கத்தின் சொத்தாக்கப்படுகிறது. திமுக வின் ஆதரவும் அந்த அளவுக்கு இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. ஆகவே சன் குழுமத்திற்கு ஏழரை சனி ஆரம்பம்.

திமுக வின் நிலை என்ன

திமுகவை பொருத்தவரையில் தயாநிதிமாறனின் கைது ஒருபுரம் சோகமாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர திமுகவினர் அனைவருமே மேல்மட்ட தலைவர்களும்கூட இதை மகிழ்ச்சியாகவே கருதுகிறார்கள். ஏனெனில் இரண்டாம் அலைக்கற்றை ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதே சன் தொலைகாட்சிதான்.

ஊழலற்ற காங்கிரஸ்

மூன்று மதிய அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கயுள்ள போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருத்தருக்கு கூட இதில் பங்கில்லை என்று நினைக்கும் போது இதில் யார் முட்டாள் என்று எனக்கு தெரியவில்லை. தன கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மாட்டிக்கொண்ட பிறகும் காங்கிரஸ் கட்சியை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் திமுக முட்டாளா? இதிலும் மூன்று பேரில் ஒருத்தர் தன்னுடைய மகள். ஒரு பக்கமாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் முட்டாளா? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் முட்டாள்களா? மன்னிக்கவும் நீதிபதிகளை தவறாக எழுதியதற்கு. நன் அப்படி எழுதுவதன் காரணம், ஒரு அமைச்சரவையில் தப்பு நடக்கிறது என்பது அந்த அமைச்சரவையின் தலைவர் பிரதமருக்கு தெரியாதா? அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் அனுமதி இல்லாமல் இரண்டாம் அலைகற்றை வர்த்தகம் நடந்திருக்குமா? இதற்கு பிரதமர் போறுப்பாகமாட்டாரா? காங்கிரஸ் கட்சிகாரர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா?

ஆனால் இன்னும் இரண்டு வாரத்திற்குள் செட்டியார் பொம்மை சிதம்பரம் இந்தவழக்கில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது..

பிழை ஏதேனும் இருப்பின் தொடர்புகொள்க rajkumareco@gmail.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More