Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு

திமுக அழைப்பு விடுத்துள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் முன்பு நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இநதப் போராட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் இன்று வழக்கம் போல பள்ளிக்கூடங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. (ஏன் சொல்லமாட்டீர்கள் உங்களுக்கு என்ன கவலை)

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மாணவச் செல்வங்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்துள்ளது. எனவே இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இவங்க சண்டைல நம்ம பசங்க படிப்பு போச்சே!
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் பாடபுத்தகங்களை கொடுத்தால் சரி!

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

இது செய்தி

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

என் கருத்து

எப்படித்தான் அந்த பணம் விழுங்கும் முதலை தயாநிதி மாறனுக்கு மனது வந்ததோ ராஜனாமா செய்ய யப்பா... அவர் ராஜனாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை பிரதமரே அவரின் அன்னை சோனியா காந்தியில் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி இருப்பார்.

இப்போது மொத்தம் மூன்று திமுக அமைச்சர்கள் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக தயாநிதிமாறனும் உள்ளே போவது உறுதி. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு எக்கச்சக்க ஆதாரங்கள் உள்ளது. இதில் முக்கிய ஆதாரம் aircell நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனின் நேரடி வாக்குமூலம்.
ஏற்கனவே சண் தொலைகாட்சியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளே இருக்கிறார். சண் குழுமத்தின் தலைவர் கலநிதிமாறனும் பல வழக்குகளில் சிக்கும் நிலைமை தற்போது நிலவுகிறது. ஏன் இவர்தான பெரிய பணம் விழுங்கும் முதலை... தமிழக கேபிள் நிறுவனமும் அரசாங்கத்தின் சொத்தாக்கப்படுகிறது. திமுக வின் ஆதரவும் அந்த அளவுக்கு இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. ஆகவே சன் குழுமத்திற்கு ஏழரை சனி ஆரம்பம்.

திமுக வின் நிலை என்ன

திமுகவை பொருத்தவரையில் தயாநிதிமாறனின் கைது ஒருபுரம் சோகமாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர திமுகவினர் அனைவருமே மேல்மட்ட தலைவர்களும்கூட இதை மகிழ்ச்சியாகவே கருதுகிறார்கள். ஏனெனில் இரண்டாம் அலைக்கற்றை ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதே சன் தொலைகாட்சிதான்.

ஊழலற்ற காங்கிரஸ்

மூன்று மதிய அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கயுள்ள போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருத்தருக்கு கூட இதில் பங்கில்லை என்று நினைக்கும் போது இதில் யார் முட்டாள் என்று எனக்கு தெரியவில்லை. தன கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மாட்டிக்கொண்ட பிறகும் காங்கிரஸ் கட்சியை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் திமுக முட்டாளா? இதிலும் மூன்று பேரில் ஒருத்தர் தன்னுடைய மகள். ஒரு பக்கமாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் முட்டாளா? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் முட்டாள்களா? மன்னிக்கவும் நீதிபதிகளை தவறாக எழுதியதற்கு. நன் அப்படி எழுதுவதன் காரணம், ஒரு அமைச்சரவையில் தப்பு நடக்கிறது என்பது அந்த அமைச்சரவையின் தலைவர் பிரதமருக்கு தெரியாதா? அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் அனுமதி இல்லாமல் இரண்டாம் அலைகற்றை வர்த்தகம் நடந்திருக்குமா? இதற்கு பிரதமர் போறுப்பாகமாட்டாரா? காங்கிரஸ் கட்சிகாரர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா?

ஆனால் இன்னும் இரண்டு வாரத்திற்குள் செட்டியார் பொம்மை சிதம்பரம் இந்தவழக்கில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது..

பிழை ஏதேனும் இருப்பின் தொடர்புகொள்க rajkumareco@gmail.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More