Showing posts with label ஆடுகள். Show all posts
Showing posts with label ஆடுகள். Show all posts

அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு

குன்னூரில் அரசு இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 65 ஆடுகள் மர்மமான முறையில் பலியான குறித்து விசாரனை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வண்டிசோலை கிராமத்தில் விவசாயிகளுக்கு, அரசு இலவச திட்டம் மூலம் ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 65 ஆடுகள் திடீரென மர்மமான முறையில் பலியாகின.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த ஆடுகள் வைரஸ் நோய் தாக்கி பலியானதா, காலநிலை மாற்றத்தால் பலியானதா அல்லது கொடுக்கும்போதே நோய் பாதிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு வழங்கும் இலவச ஆடு மாடுகள் நோய் பாதிக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 65 இலவச ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More