போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை போக்கு வரத்து காவல்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின் சீரியல் எண்ணை அவர்கள் பணியின் போது வைத்திருக்கும்... நோட் புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை மனப்பாக்கம் அருகே போக்கு வரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த வழியாக செல்போனில் பேசிக் கொண்டு வந்த கார் டிரைவரை மடக்கினார்.

அந்த டிரைவரை பார்த்து செல்போன் பேசியபடி ஓட்டியதால் ரூ.1100 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அவர் காரின் பின் பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் சாரிடம் பேசுங்கள் என்று கூறியதற்கு சாராக இருந்தாலும், மோராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஸ்பார்ட் பைன் ரூ.1100 கட்ட வேண்டும், இல்லை என்றால் என்னை கவனித்து விட்டு செல்லுங்கள் என்று கறாராக கூறினார்.

டிரைவருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை திறந்தார். அவரை பார்த்த போலீஸ் காரர் அதிர்ச்சி அடைந்து வணக்கத்தை தெரிவித்தார். காரில் வந்தது சென்னை காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு பணிபுரியும் உயர் அதிகாரி.

அந்த அதிகாரி போலீஸ்காரரை பார்த்து உன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை எடுங்கள் என்று கூறிய போது, பாக்கெட்டில் அவர் ரூ.1000 வைத்திருந்தார். ஏது இவ்வளவு பணம் என்று கேட்ட போது அவர் ஆடிப் போனார். உடனே காரில் வந்த அதிகாரி, போக்குவரத்து போலீசார் யாரும் ஒழுங்காக பணி செய்வதில்லை என்றும் கலெக்ஷன் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு காரில் சென்று விட்டார். அந்த செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கண்டிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் தான் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணிக்கு வந்து பிறகு வீட்டிற்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல பணத்தை கொண்டு வந்தாலும் அதிகாரிகள் சோதனையின் போது மாட்டிக் கொண்டால் உள்ளதும் போய்விடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து வருகிறார்கள்.

காவல் துறையில் ஒரு சிலர் செய்யும் தவறினால் அனைவருக்கும் களங்கமும், பாதிப்பும் ஏற்படுவதாக நேர்மையான போலீசாரும் புலம் புகிறார்கள்.

இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு?


கும்பலே இல்லாத கூடங்குளம்-இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு? ஏன் கிராமம் கிராமமாக, வீடு வீடாக தேடுதல் வேட்டை? பதுங்கி இருக்கும் ஒசாமா பின் லேடனைத் தேடுவது போல ஒரு அதிபயங்கரச் சூழல் ஏன் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

எதேச்சாதிகார அராஜக அரசியல் நடக்கிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதை பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இதை எதிர்க்க வேண்டும். மக்களாட்சி மரபுகளை மதிப்பவர்கள் போலீஸ் முற்றுகையை அகற்றக் கோர வேண்டும். மக்கள் நலத்தில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் இதை வன்மையாக எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்!




சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் !


படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!.

நன்றி: சசிதரன்

வைகோ தமிழ அரசியல் வரலாற்றில் ஒப்பில்லாத தலைவன்!


கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் மூன்று முறை மாநிங்கலவை உறுப்பினர் பதவி வகித்தவர் , இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினர் பதவி வகித்தவர் . இதுவரை இவர் தொட்டுப்பேசாத, போராடாத மக்கள் பிரச்சனைகளே இல்லை எனலாம் . இத்தனை வருட பொதுவாழ்க்கையில் ஒருமுறை கூட ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகதவர் .

ஆட்சியில் இருந்தால் நரம்பு புடைக்க திராணி பற்றி பேசுகிற தலைவர்கள் , ஆட்சியில் இல்லாத போது மலைவாசஸ்தலத்தில் ஓய்வில் இருப்பார்கள் . ஆட்சியில் இருந்தால் தன் பதவி தன் பிள்ளைகள் பதவி தன் பேரன்மார்களின் தொழில் வளர்ச்சி என்றிருக்கிறவர்கள் , ஆட்சியில் இல்லாத போது திராவிடம் ஆரியத்தின் அட்டகாசம் , தமிழினம் ஈழத்துயரம் என்றெல்லாம் நாடகம் ஆடுவார்கள் .


ஆளுங்ககட்சியின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் , எந்த அதிகாரத்திலும் இல்லாத போதும் , வருடக்கணக்கில் மக்கள் பிரச்சனைக்காக சிறையில் இருந்தாலும் எப்போதும் மக்களை அவர் தம் வாழ்க்கையை , நலனை பற்றியே சிந்திக்கிற தலைவன் வைகோ ஒருவர் தான் .

கடந்த சட்டமன்றதேர்தலில் நிதானமில்லாத ஒரு கட்சிக்காக காத்திருந்து கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தார் ஒருவர் . இன்னொருவரோ , எப்படியும் காங்கிரசை தக்கவைக்க வேண்டி குட்டிகரணம் போட்டுகொண்டிருந்தார் இன்னொரு தலைவர் . எல்லோரும் கடந்த சட்டமன்றதேர்தலில் கூட்டணி பேசுவதில் மும்முரமாக இருந்த போது , வைகோ ஒருவன் தான் மன்மோஹனை சந்தித்து "புகிஷிமா போல இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியா அதை எப்படி சமாளிக்க போகிறது . இந்தியமக்களின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் " என்று மன்றாடினார் .


ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் என்ன என்ன வாங்கினார்களோ , வாய் மூடி கிடந்தார்கள் தமிழின தலைவர்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் சலசலப்பிற்கு அஞ்சாதவனாக தொடர்ந்து அந்த ஆலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராடினார் . தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிராத போதும் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து கண்ணீர் வடித்து அவர்களுக்காக சர்வதேச சமூகத்திடம் மன்றாடிகொண்டிருக்கிறார் .

முல்லைபெரியாறு பிரச்சனையில் கூட " உன் ஆட்சிகாலத்தில் தான் பிரச்சனை தீர்க்கப்படவில்லை , இல்லை இல்லை உன் ஆட்சியில் பிரச்சனை சிக்கலானது " என மாறி மாறி புள்ளிவிவரங்களோடு கீழ்த்தரமான அரசியல் செய்தார்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக போராடினான் .

இப்படி போராடி போராடி போராடி , இன்னும் போராட முனைப்போடு இருக்கிற தலைவன் வைகோ ....


ஆனால் இந்த மக்களை பாருங்கள் ...தொடர்ந்து ஊழலை ஒரு பொது புத்தி ஆக்கியவனை அங்கீகரிக்கிறார்கள் . சினிமாவில் வசனம் எழுதியதை தவிர வேறொரு தொழிலும் செய்யாமல் முதல்வர் பதவியை தொழிலாக செய்தவர்களை அங்கீகரிக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி கோடிகணக்கில் சொத்து வந்தது ?. உங்கள் மருமகன் உங்களோடு சுற்றிகொண்டிருந்தவராயிற்றே அவர் பிள்ளைகள் எப்படி இன்று இந்தியாவின் குறிப்பிடும்படியான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் , உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு எப்படி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்க முடிகிறது ..? என்றெல்லாம் கேள்வி கேட்க மக்களுக்கு வாய் வருவதே இல்லை . ஓட்டுப்போடும் போதும் அதை எல்லாம் நினைவில் கொள்வதில்லை .

வந்த உடன் பேருந்து கட்டணத்தை ஏற்றியபோது கேவலமாக திட்டியவர்கள் , பால் விலையை கூட ஏற்றினால் என்ன செய்வது என்று அங்கலாய்த்தவர்கள் , நூலகத்தின் மீது கூடவா காழ்ப்புணர்ச்சி காட்ட வேண்டும் ? என்றெல்லாம் பொருமித்தள்ளியவர்கள் கூட இன்று சங்கரன்கோயிலில் ஓட்டுபோடும் போது அவர்களால் சீர்தூக்கி பார்க்க , நினைத்து பார்க்க முடியவில்லை .

தன் குடும்பத்தை அரசியலில் நுழைக்கத்தெரியாத, தனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து கட்டாயம் ஏற்றுகொள்ள வேண்டும் என்று வாஜ்பாய் வற்புறுத்திய போது கூட , அதை தன் கட்சி சகாக்களுக்கு விட்டுகொடுத்த, தன் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக இருந்த போதும் தன் மனைவியை விட்டு நீராராடியாவோடு பேரம் பேச தெரியாத காரணத்தால் , தமிழ் நாட்டின் எல்லா திசைகளிலும் சொத்து வாங்கி குவிக்க தெரியாத காரணத்தால் , ஒழுக்க நெறியோடு ஒரே மனைவியோடு வாழ்கிற காரணத்தால் தான், மக்கள் வைகோவை தகுதியில்லாத அரசியல் தலைவர் என கருதுகிறார்களா ?


ஓய்வென்பதயே அறியாமல் புயலை போலவே சுற்றித்திரிகிற வைகோ , "அரசியலில் நேர்மை , பொதுவாழ்வில் தூய்மை , லட்சியத்தில் உறுதி " என்று தன் கட்சியின் கொள்கையாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அதன்படி செயல்பட்டுகொண்டிருக்கிற வைகோவை நீங்கள் ஆதரிக்க தயங்குகிரீர்கள் என்றால் நாம் வைகோவை ஏமாற்ற வில்லை , நாம் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம் என்று பொருள் .


வைகோ நல்ல மனிதர் தான் , ஆனால் அவரால் நல்ல இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க தெரியவில்லை என்ற சிலரின் குற்றச்சாட்டு எனக்கு நகைப்பை தருகிறது .நீங்கள் யாரை இரண்டாம் கட்டத்தலைவர் என்று சொல்கிறீர்கள் ? தன் தலைவர் மூணு கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே முதுகு வளைந்து தரையில் விழுந்து கும்பிடுபவர்கலையா ? தன் தலைவனை போலவே ஒன்று இரண்டு மூன்று என கூட்டிகொள்கிரவனையா ? ஊருக்கு ஒரு பொறியியல் கல்லூரி , வெளிமாநிலங்களில் முதலீடு , கடற்கரை மாளிகைகளை தன் தலைவனை போல சம்பாதித்து கொண்டவர்களை தான் நீங்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொன்னால் , நிச்சயம் வைகோவால் அப்படிப்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க முடியாது .



Thanks for Content: Udayakumar Facebook

அணுமின்சக்திக்கு யுரேனியம் ஏன் அவசியம்?

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணுசக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘அணு’வை நினைத்து பயப்பட த்தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும் ‘கிலி’ குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி தெரிந்து கொள்வோமா?

யுரேனியம் ஒரு வித்தியாசமான தனிமம். இதில் இருந்து வெளி யேறும் ஒளிக்கதிர்கள் மனித குலத்துக்குப் பயனளிக்கின்றன; அச்சுறுத்தவும் செய்கின்றன. யுரேனியத்தை 1789ல் மார்ட்டின் ஹெய்ன்ரிச் க்ளாப்ரோத் என்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். தின்ம நிலையில்தான் இதைக் கண்டுபிடித்தார் அவர். அதற்கு அவர் முதலில் சூட்டிய பெயர் ‘யுரேனிட்’. ஓராண்டுக்குப் பிறகு ‘யுரேனஸ்’ கோளின் நினைவாக ‘யுரேனியம்’ என்று பெயர் சூட்டினார். முதல் இதில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை இவர் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நூறாண்டு கழித்து பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பெக்யூரல் என்பவர் யுரேனியத்தில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

யுரேனியம் ஒளிவீசும் வெண்மை நிறம் கொண்ட தனிமம். காற்று மண்டலத்தின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது. தனிமங்களிலேயே இது அதிகக் கனமானது. ஒரு கன அடி யுரேனியம் 500 கிலோ எடை இருக்கும். ஆரம்ப காலத்தில் பட்டுத் துணிகளுக்குச் சாயம் ஏற்றவும், பீங்கான் பாத்திரங்களுக்கு வண்ணம் தீட்டவுமே இது பயன்படுத்தப்பட்டது. இன்று இதன் பயனும் பயமும் அளவிட முடியாதது!

யுரேனிய அணுக் கருவிலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஒளிக்கதிர்கள் மனிதகுலத்திற்கு மிகவும் பயன் அளிக்கின்றன. விவசாயம், தொழில், உயிரியல், மருத் துவம் போன்ற துறைகளில் அதிகளவில் இக்கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுரேனி யத்தை அழிவுக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபணமானது 1938ல்தான். அப்போது யுரேனியத்தை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்த இத்தாலியின் என்ரிக்கோ ஃபர்மி தலைமையிலான குழு, அணுக்கருவை நியூட்ரானுடன் சேர்த்து வெடிக்கச் செய்தபோது அணுக்கரு பிளவைக் கண்டுபிடித் தனர்.

இப்படி நியூட்ரான் வெடிப் பதால் யுரேனியம் அணுக்கரு இரு பகுதிகளாகப் பிளந்து விடுகிறது. இந்த அணுப்பிளவு பிரமாண்டமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அணுப் பிளவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அணுகுண்டு தான் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் வீசப்பட்டது. ஒரு நொடிப்பொழுதில் அந்நகரமே மண்ணோடு மண்ணானது. இதன் பின்புதான் யுரேனியத்தின் மதிப்பு உலக நாடுகளிடையே அதிகமாக உற்றுநோக்கப்பட்டது.

இப்போது அணுவை ஆக்கத் திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளும் அணு மின்சார உற்பத்திக்காக அணுக்கருப் பிளவை பயன்படுத்துகின்றன. 30 லட்சம் பவுண்டு நிலக்கரியை எரிப்பதால் எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அது ஒரே ஒரு பவுண்ட் யுரேனியத்தில் இருந்து கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அணுஉலைகளில் மின் உற்பத்திக்காக யுரேனியம் பயன்படுத்தப்படுகின்றது!

நன்றி: தினகரன்

அன்புடன்
பாபு நடேசன்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More