மகாத்மா காந்தி தேசத் தந்தை கிடையாது: உள்துறை அமைச்சகம்

Aishwarya Parashar

நாட்டு விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்திக்கு ‘தேசத் தந்தை' என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார். அதில் மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மகாத்மாவைத் தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார், இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம்,
மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இன்று சின்மயி கொதிப்பதன் நிஜப்பின்னணி இதுவே.... உண்மை விரும்பிகளுக்கு


நன்றி @thunukku on twitter

இன்று சின்மயி கொதிப்பதன் நிஜப்பின்னணி இதுவே.... உண்மை விரும்பிகளுக்கு

ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் என்ன தகராறு என்பதை பலரும் பலவாறாய் திரித்து வருகின்றனர்..டுவிட்டரில் பல ஆண்டுகளாய் இருந்து பார்த்ததால் நானறிந்ததை தெரிவிக்க வேண்டியது கடமையாகிறது..

நிகழ்வு 1: ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் உண்மையில் நேரடியாக நிகழ்ந்த வாக்குவாதம் பின்வரும் இணைப்பில் உள்ளது மட்டுமே..

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

அதில் விவாதத்தை ராசன் துவங்கவுமில்லை.. இடையில் வந்து பிறகு இடையிலேயே போய் விடுவார். இந்த விவாதத்தில் ராசன் மட்டுமல்ல.. நிறைய பேர் பங்கெடுத்தனர். உண்மையில் மிக தீவிரமாக விவாதம் செய்தது ராசனல்ல. வேறு சிலர்..

இந்த விவாதம் முடிந்த பின்னரும் கூட ராசனுக்கும் சின்மயிக்கும் எந்த சண்டையோ கோபமோ இருந்ததாகத் தெரியவில்லை..

இது முடிந்ததும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து டுவீட் போடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது..

நிகழ்வு 2:

இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற பத்திரிக்கையின் ”தி அதெர் வாய்செஸ்” என்கிற கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களின் மீது இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் (சிட்டிசன் ஜர்னலிஸ்ட்ஸ்) பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்பவர் (வட இந்தியர்) மார்ச் 10, 2012ல் எழுதியிருந்தார். மகேஷ் மூர்த்தியும் டுவிட்டரில் உள்ளார். அதில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தார். மற்ற மற்ற தலைப்புகளில் பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை வகைப்படுத்தியிருந்தார். மார்ச் 10, 2012

http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

ராசனின் நண்பர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் வசிப்பவர் என்கிற முறையில் சின்மயிக்கும் பாராட்டு தெரிவித்து விட்டனர்.

ஆணவத்தில தலைகால் புரியாத சின்மயிக்கு வந்ததே ஆத்திரம்.. தனது பெயர் வெளியிட்ட ஒரு பக்கத்தில் ராசன் என்கிற தமிழில் டுவிட்டும் 2000 ஃபாலோயர் (அப்போது) கூட இல்லாத டுவிட்டரின் பெயர் வரலாமா என்று கட்டுரையை எழுதிய மகேஷ் மூர்த்தியிடம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக டுவிட்டரில் சண்டையிட்டார். மகேஷ் மூர்த்தியும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துப் பார்த்தார். சின்மயி கேட்கவில்லை..

ஒன்று ராசன் பெயரை நீக்க வேண்டும் அல்லது தனது பெயரை நீக்க வேண்டுமென தொல்லை கொடுத்தார்.

கட்டுரை எழுதிய மகேஷ் மூர்த்தி மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டினார்..

மகேஷ் மூர்த்தி தனது கட்டுரையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என சின்மயியிடம் இறுதியாகச் சொல்லி உன்னால் முடிந்ததைப் பார் எனச் சொல்லி விட்டார்..

இந்த முழு உரையாடலும் டுவிட்டரில் இருந்த ராசன் மற்றும் அவரது நண்பர்கள் கவனித்து வந்தனர். அடுத்துக் கெடுக்க நினைத்த சின்மயி முடிவில் மூக்கறுபட்டவுடன் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #போட்டு கிண்டல் செய்து டுவீட்டுகள் போட்டு சின்மயியின் சின்ன புத்திக்கு செருப்படி கொடுத்தனர்.

இந்த #ல் பதிவு செய்த அத்தனை பேரையும் ப்ளாக் செய்துவிட்டார். அதுவும் சரியானதுதான். அது அவரது உரிமையும் கூட.

இதை தீராத வன்மமாக பழி உணர்ச்சியாக மனதில் பதியம் போட்டு வந்தனர் சின்மயியும் அவரது தாயும். இப்போதுதான் அவர்களுக்கு நேரம் கிட்டியதோ என்னவோ தெரியவில்லை #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #ல் யாரெல்லாம் டுவிட்டினார்களோ அவர்களின் தனித்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்போது ஒளிந்திருந்து பார்ப்பது, போலிக் கணக்குகள் துவங்கி இவர்களை வேவு பார்ப்பது போன்ற வேலைகளைத் துவங்கினர்.

ராசன் உள்ளிட்ட அவரது நண்பர்களுக்குள் ஏதேனும் உரையாடல், ஆபாசப் பேச்சுகள் வரும்போது அதனை படமாக்கிவைத்தனர்.

நிகழ்வு 3: பழி உணர்ச்சியை மனதில் தேக்கிவைத்த சின்மயியின் அம்மா ராசனுடன் பேசும் அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் வேலையை கடந்த 10-20 நாட்களுக்கு முன்னர் துவங்கினார். வலுவான ஆதாரங்களைத் திரட்டச் சொல்லி யாரேனும் சொல்லியிருக்க வேண்டும்..

தொலைபேசியில் மிரட்டப் பட்ட பரிசல்காரன் போன்ற பிரபலங்கள்(?) வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை..

ஆனால் தனிப்பட்ட முறையில் ராசனிடம் சொல்லிவிட்டார்கள் போல.. ராசன் உசாராகி எந்த வித சீண்டலுக்கும் பதிலளிக்காமல் ”ஜென்” என்று போட்டுவிட்டு அமைதிகாத்துவிட்டார்..

செந்தில்நாதன் என்பவர் இதுபோல சின்மயி அம்மா தொலைபேசியில் பேசினார் என்று டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் என்னவிசயம் என்று கேட்க.. அட்வைஸ் செய்வது போல மிரட்டினார்.. நான் உங்கள் மகளுக்கு அட்வைஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னார்..

அதன்பின் அவர் போட்ட டுவீட்டும் பின்னர் உதவி பேராசிரியர் சரவணக் குமார் கேலி செய்வது போல பேசிவிட்டார்.. (பேராசிரியர் சரவணக்குமார் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மலையாளிகள் இணையத்
தாக்குதலை நடத்திய போது சிவில் எஞ்சினியர் என்கிற முறையில் வலுவான ஆதாரங்களுடன் அவ்ர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்தார்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்) அவரது சில டுவீட்டுகள் காட்டமாகத்தான் இருக்கும்..

அந்த உரையாடல் இதோ..

@senthilchn: டுவிட்டர்ல எதாவது பொண்ணுங்க பேசும்னு போன்நம்பர் கொடுத்தால் இப்படியா?
@sharankay: என்னய்யா ஆச்சு ஆம்பிளைங்க யாராவது போன் பண்ணிட்டாங்களா?
@senthilchn:ம்க்கும்..இல்ல தல.. சின்மயி அம்மானு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க போன் பன்ணினாங்க..
@sharankay:கொஞ்சம் வயசாயிருச்சே பரவாயில்லை.. உனக்கு செட்டாகும்.. யூஸ் பண்ணிக்கோரும்
@senthilchn:ம்க்கும்.. எதுக்கு தல..
@sharankay: கடலைக்குத்தான்யா..

சீண்டிவிட்டு இவர்களைப் பேச வைக்க வேண்டுமென்பதுதானே நோக்கம்.. அதற்காகத்தானே வலை விரிக்கப் பட்டிருந்தது.. சிக்க வைக்க நினைத்த ராசன் சிக்கவில்லை.. ஆனால் அவரிடம் பேசிய குற்றத்திறாக
வழிபோக்கர்கள் ரெண்டுபேர் சிக்கிக் கொண்டனர். மேற்கண்ட உரையாடலில் கடைசி வரியை நீக்கிவிட்டால் ஆபாசத்தின் உச்சமாகத் தெரியும்.. படிப்போர் உனர்ச்சி வசப்படுவர். எனவே கடைசி வரியை திட்டமிட்டு நீக்கிவிட்டு ஸ்கிரீன் ஷாட்டுடன் பேராசிரியர் படத்தையும் போட்டு சின்மயி முகநூலில் போவோர் வருவோரையெல்லாம் ஆபாசமான கமெண்டுகள் போடச் செய்து அதை ரசித்தார்.. ஐந்தாறு டுவிட்டர்களின் பெயரைக் குறிப்பிட்டு இரண்டாண்டுகளாக பெண்ணென்றும் பாராமல் தொல்லை செய்ததாக நீலிக்கண்ணீர் வடித்தார்..உண்மைகளை விளக்கும் கமெண்டுகளை யாரும் எழுதினால் அனுமதிக்காமல் நீக்கினார்.

உடனே சின்மயியின் அபிமானிகள் என்ற பெயரில் சாதித்துவேசத்திற்குப் பெயர்போன,, தமிழ் டுவிட்டர்கள் மற்றும் உணர்வாளர்களை கொச்சைப் படுத்திவரும் @மாயவரத்தான் @கேஎஸ்நாகராசன் இருவரும் அவர்களது
முன்பகையைத் தீர்த்துக் கொள்ள இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள எத்தனித்து சின்மயி மற்றும் அவரது தாயாருடன் தொடர்பு கொண்டு உதவி செய்வதாகக் கூறி ராசனது நேரக்கோட்டில் போலிக் கணக்குகளில் நுழைந்து படமெடுத்து யூஸ்தமிழ் இணையத்தில் பதிவேற்றினர். அவ்வப்போது சின்மயியையும் அவரது அம்மாவையும் தூண்டிவிட்டு உசுப்பேற்றி பழிதீர்க்க இதுவே தருணம் என சகுனி வேலை செய்தனர்..

@மாயவரத்தானின் சாதிவெறி டுவீட் உங்கள் பார்வைக்கு..

http://t.co/X4FmAvAB

@sharankay சிறையில் இருக்க வேண்டுமானால் @மாயவரத்தான் எங்கேயிருக்க வேண்டுமென உங்கள் தீர்வுக்கே விட்டுவிடுகிறேன்.

ராசனின் டுவீட்டுகள் சில ஆபாசமாகத்தான் இருக்கும்.. பொது வாழ்க்கையில் இருக்கும் சிலரை அவர் கேலி செய்வது உண்மைதான்.. ஆனால் டுவிட்டரிலும் முகநூலிலும் பிற இணைய ஊடகங்களிலும் சாமானியர்களின் குரல் ஒலிக்கவில்லையென்றால், ஊரைக்கொள்ளையடித்து உலையில் போடும் அரசியல்வாதிகளையும்

அவர்களிடம் வாங்கிப் பிழைக்கும் ஊடகங்களையும் யார் கேட்பது.. சாமானியனின் குரல் சவுக்கடிபோலத்தான் இருக்கும். அதை நசுக்குவதே ஆதிக்க சக்திகளின் நோக்கம்..ஆபாச எழுத்துக்களை ஆதரிப்பதற்கில்லை.. ஆனால் ஆபாசம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.. ராசன் சின்மயிடம் ஆபாசமாகப் பேசியதாக எந்த ஆதாரமுமில்லை.. அவர்கள் குற்றச்சாட்டு ராசன் பொதுவாக

ஆபாசமாகப் பேசினாரென்றால் அதற்குரிய பிரிவில் நடவடிக்கையெடு.. அவர் பொதுவில் ஆபாசமாகப் பேசுவதால் சின்மயிக்கும் அவரது அம்மாவுக்கும் என்ன கேடு.

ஏன் இந்த பொய் வழக்கு?

ஆபாசப் படங்கள் வெளியிட்டார்கள், செக்ஸ் தொல்லை கொடுத்தனர் என பொய் வழக்கு. ஆதாரம் கேட்டால்
அவர் ஜெயலலிதாவைப் பேசினார், கருணாநிதியைப் பேசினார் என ஸ்கிரீன் ஷாட்டுகள். என்ன நேர்மையிருக்கிறது இது போன்ற சாதி வெறியர்களிடம்....

சின்மயி தமிழில் எழுதுவதையே அவமானமாக நினைப்பவர்.. மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு குறித்த அவரது பிற்போக்கான கருத்துகளுக்கு பரவலாக விமர்சனம் வந்துவிடவும் ”மறவர் சீமையாம் பரமக்குடியில் பிறந்த தமிழச்சி” என அடைமொழி கொடுத்துக் கொள்கிறார். பரமக்குடி மறவர் சீமையென எவர் சொன்னது.. அது பாண்டிய நாட்டின் ஒரு அங்கம்.. பாண்டிய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்தப் பெருமை சொந்தமானது..

இதிலும் சாதியைப் புகுத்திவிட்டால் தமிழர்களை பிளவு படுத்திவிடலாம். என்னே நுண்ணரசியல்...

ஏதோ பெரியாரோடு முடிந்து விடவில்லை பணி.. இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிக்கும் இன்னும் எக்கச்சக்கமான வேலை காத்திருக்கிறதென்பதை உணர்த்துவதே இது போன்ற சாதி வெறியர்களின் ஆதிக்கம்..

அவர்களது நோக்கம் இணையத்தில் தமிழர்களுக்கு பிரச்சினயென்றால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.. அதைச் சிதைக்க வேண்டும்.. இனிமேல் எவனாவது பேசுவான்.. பேசினாலும் அனுமதி வாங்கிவிட்டல்லவா பேசவேண்டும்..

பின் குறிப்பு: ராசன் லீக்சு எனது நண்பரல்ல.. அவரை நானோ என்னை அவரோ டுவிட்டரிலோ முகநூலிலோ தொடரவில்லை..

பிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories


பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   

இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.

தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.

         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    

என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.

இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.

      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?


Tags: Tamil Friendship Stories, Pisiraanthaiyaar, Kopperum Chozhan, Tamil History Stories, Historical Stories

12,000 கோடி ரூபாய் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது!


செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது.
பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள க்யூரியாசிட்டி அந்த கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கலத்தின் வேகம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியவுடன் அதன் ஈர்ப்பு விசை காரணமாக அதிகரித்தது. இருப்பினும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மிக மிக பத்திரமாக தரையிறக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஐஸ் கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்ப நிலை மைனஸ் 12 செல்சியல் ஆகும்.
கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன.

பன்னி கூட சிங்கிளாக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால் சிங்கம் சிங்கிளாக வர வாய்ப்பில்லை

சிங்கம் மற்றும் புலிகளின் குணாதிசய ஒப்பீடு (பல இணைய தளங்களில் சுட்டது)

சிங்கம் என்றும் தனியாக வேட்டைக்கு போகாது, கூட்டமாகவே செல்லும்.. 
புலி தனியாகவே வேட்டைக்கு செல்ல விரும்பும்

சிங்க குட்டிக்கு மூத்த சிங்கம் ஏதாவது வேட்டையாட சொல்லி கொடுத்தால்தான் வேட்டையாடும்.. 
ஆனால் புலிக்குட்டியை சில நாட்களிலேயே மூத்த புலிகள் தனியாக விட்டுவிடும், வேட்டையாடும் இயல்பு புலிகளுக்கு இயல்பாகவே அமைந்தது

ஆண் சிங்கம் சோம்பேறி, பெண் சிங்கம் வேட்டையாடும் உணவை ஆண் சிங்கம் உண்ணும்,.. 
புலிகளில் புலிக்குட்டி, ஆண் புலி, பெண் புலி என அவைகளுக்கு ஏற்ற உணவை அவைகளே தேடி கொள்ளும்

சிங்கங்கள் தனக்குள்ளே அடித்து கொண்டாலும், வேறு மிருகங்கள் வரும் போது ஒற்றுமையுடன் இருக்கும்.. 
புலிகள் ஒன்றாக இருக்க விரும்புவதில்லை, தனிமையையே பெரும்பாலும் விரும்பும்

சிங்கம் "இடம் சாரா உயிரினம்" என்று அழைக்கப்படும், பல இடங்களில் சென்று அதன் ஆட்சியை செலுத்தும்..
புலி "இடம் சார்ந்த உயிரினம்" என்று அழைக்கப்படும், தான் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் செல்ல விரும்பாது, மற்ற இடங்களில் ஆட்சி செலுத்தவும் விரும்பாது, 

சிங்கங்கள் இறந்த உணவை நெடு நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் உடையது, சிங்கத்திற்கு பசிக்காவிட்டாலும் உணவை வேட்டையாடி சேமித்து வைத்து கொள்ளும்.. 
புலிகளுக்கு பசிக்கும் போது மட்டுமே வேட்டையாடும் எண்ணம வரும், வேட்டையாடிய உணவு மீதமைடைந்தால் அப்படியே விட்டுவிட்டு சென்று விடும், அடுத்த வேளைக்கு வைத்து கொள்ளாது..

சிங்கமும் புலியும் ஒன்று சேர ஒரே இடத்தில் வாழ விரும்பாதவை, இரண்டையும் சேர்ந்து பார்ப்பது மிக மிக அரிது

நாற்பது யானைகள் வந்தாலும் சிங்கம் தனியாக எதிர்த்து நிற்காது, நான்கு நரிகள் வந்தாலே எதிர்க்க தயங்கும்


நன்றி: Agazhvaan GGanesh

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருந்து சோதனை: 12 பேர் பலியானதாக தகவல்!

மனிதர்களை கினியா பன்றிகளைப் போல மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு வந்த ஏழை நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடத்தியதில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மருந்து பரிசோதனை நடத்தப்பட்ட 279 நோயாளிகளில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரின்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

12 பேர் மருந்து அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலியானதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் இலவச சிகிட்சைக்காக மருத்துவமனையில் அபயம் தேடிய அப்பாவி ஏழைகள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுவிற்கு பதிலாக கிடைத்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை மருந்து பரிசோதனைக்கு மருத்துவமனை அதிகாரிகள் உட்படுத்தியதாகவும் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியதாகவும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதியுறும் ராமதர் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மருந்தை தந்தனர். பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் வாசிக்க தெரியவில்லை” என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

தனது கணவரை மருத்துவமனை அதிகாரிகள் தவறான மருந்தை கொடுத்து கொலைச் செய்ததாக போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டு இன்னொரு நபரான சங்கர்லாலில் மனைவி லட்சுமி பாயீ குற்றம் சாட்டுகிறார்.

உயிர்பிழைக்க மாட்டார்கள் என உறுதியான நோயாளிகளிடம் மருத்துவர்கள் மருந்து சோதனை நடத்தியதாகவும், ஒவ்வொரு நோயாளியிடமும் சோதனை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மருந்து கம்பெனிகள் பணம் அளிக்கின்றனர் என சமூக ஆர்வலர் ரசனா தின்கரா கூறுகிறார்.

அதேவேளையில் மருந்து பரிசோதனை குறித்து பல்வேறு ஏஜன்சிகள் மாறுபட்ட புள்ளிவிபரங்களை அளித்துள்ளன. செண்ட்ரல் க்ரேடு ஸ்டாண்டர்டு ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) புள்ளிவிபரப்படி போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரில்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) 7 மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை ஆவணங்களில் 10 சோதனைகள் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது. 13 சோதனைகள் நடத்தப்பட்டதாக மருந்து கம்பெனிகள் அமெரிக்க அரசுக்கு அளித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொத்தம் 3 பரிசோதனைகள் மட்டுமே பி.எம்.ஹெச்.ஆர்.சியில் நடந்ததாக ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா(டி.சி.ஜி.ஐ) கூறுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஹெல்த் ரிசர்ச் பிரிவு செயலாளர் டாக்டர் வி.எம்.கட்டக் தெரிவித்துள்ளார். மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை கினியா பன்றிகளைப் போல உபயோகிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச பா.ஜ.க அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இந்தியாவில் ஏழை மக்களிடம் மருந்து கம்பெனிகள் பெருமளவில் மருந்து பரிசோதனை நடத்துவதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான விசாரணையின் போது ஏழு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு?

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? அதற்கு எவ்வளவு வட்டி? கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? பாக்கி கடன் எவ்வளவு உள்ளது? குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா? வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா? எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

பெங்களூர் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மாற்றான்... சுட்ட படமா, சுடாத படமா...?


ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.
அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.
அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!
மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.
இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.
.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!

வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை

நமக்குச் சொந்தமான கச்சதீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல், மத்திய அரசு விழிக்கிறது. வல்லரசு கனவு காணும் இந்தியா, தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் பழிக்காதா?


கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாக 75 கோடி அமெரிக்க டொலர்களும் (சுமார் ரூ. 4,125 கோடி), நிதி உதவியாக 35 கோடி அமெரிக்க டொலர்களும் (ரூ. 1,925 கோடி) தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு விலைதான் இந்திய மீனவர்களின் உயிரும், உடைமையுமா? தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?'

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது | Hubble Discovers a Fifth Moon Orbiting Pluto

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட  பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது.

NASA வின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பயன்படுத்தி வானியல் குழு பனிக்கட்டி குள்ள கிரகமான ப்ளூட்டோவை சுற்றிவரும் மற்றொரு நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன்மூலம் ப்ளூட்டோவை சுற்றிவரும் நிலவுகளின் எண்ணிக்கை நாளிலிருந்து ஐந்தாக உயர்ந்திரிக்கிறது.

This image, taken by NASA's Hubble Space Telescope, shows five moons orbiting the distant, icy dwarf planet Pluto. The green circle marks the newly discovered moon, designated P5, as photographed by Hubble's Wide Field Camera 3 on July 7. The observations will help scientists in their planning for the July 2015 flyby of Pluto by NASA's New Horizons spacecraft. P4 was uncovered in Hubble imagery in 2011. (Credit: NASA; ESA; M. Showalter, SETI Institute)
மேலும் விவரங்களுக்கு:  http://www.nasa.gov/mission_pages/hubble/science/new-pluto-moon.html

டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!




நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
"பிரதமர்தான் மாண்ணுனு பார்த்த, காங்கிரஸ் கட்சில இருக்குற எல்லாருமே?"
English summary
When did US-based Time Magazine become a part of the Times of India Group of publications? Tamil Nadu Youth Congress activists who appear to be under the impression that the US publication is part of the Times group, tore up copies of the newspaper during a protest against a Time magazine report which carried a photograph of Prime Minister Manmohan Singh labeled "Underachiever". Although they were informed by mediapersons that Time was not part of the Times group, the protestors went ahead and damaged copies of the newspaper outside the American Consulate.
Source: oneindia.in

விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா? சிவகங்கை சின்னபையன் - Chidhambaram Slams Common Man


செய்தி:
"பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

வாசகர்கள் கருத்து:

சிவகங்கை சின்னபையன் என்று கருணாநிதி சிதம்பரத்தை பார்த்து அந்நாளில் சொல்வார். அது சரியாக போய் விட்டது. சின்ன பையன் போலதான் பேச்சு உள்ளது. குடி தண்ணீர் நன்றாக இருந்தால் நடுத்தர மக்கள் ஏன் பதினைந்து ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் வாங்க போகிறார்கள். நீங்க கொடுக்கும் தண்ணீரை குடித்தால் டாக்டருக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் தான் நீரை காசு கொடுத்து வாங்குகிறார்கள். அதுவும் எல்லா மத்தியதர மக்களும் வாங்குவதில்லை. அவரிகளிடம் எங்கே வசதி உள்ளது. ஆகவே நீரை காய்ச்சி பாட்டிலில் போட்டு குழந்தைகளுக்க்கு கொடுக்கிறார்கள். இதை போய் கிண்டல் செய்கிறாரே சிதம்பரம் இவர் உண்மையிலேயே சின்ன பையன் தான். ஒரு ரூபாய் அரிசி விலை ஏற்றினால் அந்த தொகை ஒரு ரூபாய் உற்பத்தியாளருக்கு போய் சேருகிறது என்று எந்த மடையன் சொன்னான்? விவசாயியை போய் கேளுங்கள்? அவர்கள் சொல்லுவார்கள். கொள் முதல் விலை கிடைக்கவில்லை என்று அழுகிறார்கள் அவர்கள். அந்த கணக்கும் சரியில்லை சின்னபையனே? நடுத்தர மக்களை விரோதித்து கொண்டு எந்த அரசியல்வாதியும் வெற்றி பெற்றதில்லை சின்னபையனே? பிரதமரை அமெரிக்க டைம் பத்திரிகை கிழி கிழி என்று குற்றம் சாட்டி யுள்ளார்கள் அதை கண்டிக்கவேண்டும், மேலும் மன்மோகன் சிங்கை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் அதற்குபல வழிகள் உள்ளன. அதை விட்டு நடுத்தர மக்களிடம் விளையாடாதீர்கள்? . மேலும் உங்களிடம் நிதி அமைச்சகம் வேறு கொடுக்க போகிறார் பிரதமர். நீங்கள் அவரை காக்கா பிடிப்பதற்கு பரிசாக. அடுத்த தேர்தலில் நடுத்தர மக்களிடம் வோட்டு பிச்சைக்கு நீங்கள் வந்தாக வேண்டும் ஜாக்கிரதை கடந்த தேர்தலில் கருணாநிதி துணையுடன் fraud தில்லு முல்லு பண்ணியதைப்போல இப்போது செய்ய முடியாது .


அறுபது வருடமாக அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் எதுவுமே தன்னிறைவு அடையாதததை நினைக்க துப்பில்லை....ஊழலை கட்டுபடுத்த வக்கில்லை......அரசாங்கத்தை செம்மையாக,ஊழலற்ற,வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க எண்ணம் இல்லை......ஆனால் விலை ஏற்றத்திற்கு மட்டும் ஒப்பீடு செய்வது குறையவில்லை......விவசாயிகள் பயன் பெரும் வகையில் கொள்முதல் விலை ஏற்றுவதை யாரும் குறை கூற வில்லை.....ஆனால் அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை பாதுகாக்க துப்பில்லாமால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை தான் என்ன ????இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தை கடுமையாக குறை கூறி குட்டியதை வசதியாக மறந்து விட்டதன் மர்மம் என்ன????? வாயிக்கு வந்தது வார்த்தை என்று எதை வேண்டமானாலும் பேசுவது....பின் எதிர்ப்பு கிளம்பியதுவுடன் மன்னிப்பு கோர வேண்டியது.......சமீப காலமாக மத்திய அரசில் பங்கு பெரும் தமிழகத்தை சார்ந்த அமைச்சர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பதோடு அல்லாமல் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளாகி தமிழகத்தின் கெளரவம் ,மற்றும் கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டார்கள்......அதில்இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது..... இவர் பேசும் தகுதியை இழந்துவிட்டார்......இப்படி பட்டவர் விலை ஏற்றதை பற்றி கூறுவது மகா கேவலமானது.....

செட்டிநாட்டு அரசருக்கு சாதாரண மக்களின் கஷ்டம் எங்கே புரிய போகிறது.மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தி உள்ளார் இந்த சிதம்பரம்.உங்கள் ஆட்சி இருக்கும் வரை என்ன பேச முடியுமோ பேசவும் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கும்.





English summary:
Union home minister P Chidambaram chided the urban middle class for bemoaning soaring prices of fuel and essential commodities. "There's steady rise in the minimum support price of paddy, wheat and sugarcane , reflected in the prices of commodities . When the urban middle class can buy a bottle of mineral water for Rs 15 and icecream for Rs 20, why do they make so much noise about price rise?" said Chidambaram. Trying to justify increase in prices, Chidambaram said, "The rise has directly benefited farmers. We raised fuel prices because the global crude prices had gone up. We also gave relief by bringing down the petrol price twice. There needn't be any complaint for price rise when things are on the side of poor farmers."

Thanks: One india

கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்? - Tamil Pregnancy / Parenting


கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.
4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.
எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.



Pregnancy Calculator Week by Week blog provides about Signs and Symptoms of Early Pregnancy, Tips for healthy pregnancy, Monthly pregnancy and A2Z about pregnancy. For More Information Visit http://pregnancycalculator-a2z.blogspot.com/

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி!


பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.
சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.
இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Source: gizbot.com

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க!


உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் இன்றைக்கு பலரும் அதிக காரமுள்ள உணவுகள், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிறு புண்ணாகிவிடுகின்றன.
இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் வெப்பத்தில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் நமக்கு உண்ணும் உணவின் பலன் கிடைப்பதில்லை. ஆகையால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. நமது உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள உரம், பூச்சி மருந்து ஆகியவை உணவுப்பாதையை சேதப்படுத்துகின்றன.

உணவுப்பாதையில் புண்களை உண்டாக்கி, அவற்றில் நுண்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் கடுமையான குடற்புண்களும், உணவுப்பாதை சார்ந்த நோய்களும் உண்டாகின்றன. ஒவ்வாத உணவுகள் அல்லது பயன்படாத உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக உணவை செரிப்பதற்கு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரைப்பையின் உட்சுவர்களையும் சேதப்படுத்துகின்றன.
இந்த புண்களின் விளைவால் முறையே ஏப்பம், நெஞ்சுகரித்தல், உணவு உண்டபின் வயிற்றுவலி, பித்தவாந்தி பின் மலம் கழிக்கும்பொழுது கறுப்பாக மலம் செல்லுதல் அல்லது உறைந்த ரத்தம் வெளியேறுதல் ஆகியன படிப்படியாக தோன்றும். இவ்வாறு தோன்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தாவிட்டால் இரைப்பை, குடல் போன்றவற்றில் ஓட்டை விழுந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவசரகால சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
உணவுப்பாதையில் புண்கள் ஏற்படாமல் தடுக்க எளிதாக செரிக்கக்கூடிய பச்சை காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் முறை அரிசி கழுவிய நீர் குடலுக்கு நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதனை உட்கொள்ளலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உணவுப்பாதையில் தோன்றும் பல்வேறு வகையான உபாதைகளை நீக்கி, இரைப்பை மற்றும் குடலுக்கு வலிமையை தரும் மூலிகை சீமைதுத்தி. இந்தச் செடிகளின் பூ மற்றும் பிற பாகங்களும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. சீமைதுத்தி இலைச்சாற்றை 10 மிலியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, தினமும் ஒரு வேளை சாப்பிட வயிற்றுப்புண்கள் ஆறும். மிளகுத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் சீமைதுத்தி இலை மற்றும் பூவிதழ்களை சமைத்து, கீரையாகவோ அல்லது தண்ணீர்ச்சாறு செய்தோ சாப்பிட்டுவர பல்வேறு வகையான குடற் புண்கள் ஆறும்.
சீமைத்துத்தியின் பூ மற்றும் இலைகளிலுள்ள பிளேவனாய்டுகள் கேம்பரால், குர்சிட்டின், டையோஸ்மெட்டின், பாலிபினாலிக் அமிலங்கள் மற்றும் கவுமாரிக் அமிலங்கள் பல்வேறு வகையான நுண்கிருமிகளை நீக்கி, வயிறு மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்து கின்றன. சீமைதுத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கீரைபோல் நீராவியில் வேகவைத்து, கடைந்து சாப்பிட குடற்புண்கள் நீங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்

மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!


சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!

இணையதளங்களை தவறாக பயன்படுத்தும் சிறுவர்கள்!


உலக அளவில் இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இன்றி இப்போது அனைவரும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே.
ஆனால் எந்த அளவிற்கு இணைய தளத்தின் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு இணைய தளத்தைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சிறுவர்கள் இணைய தளத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியும் வருகிறது. அதிலும் குறிப்பாக 8 முதல் 17 வயதிற்குட்பட்ட 53 சதவீத இந்திய சிறுவர்கள் இணைய தளத்தைத் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துகின்றனர் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இந்தியா உள்பட 25 நாடுகளைச் சேர்ந்த 8 முதல் 17 வயதிற்குட்பட 7600 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட குளோபல் யூத் ஆன்லைன் பிகேவியர் சர்வே என்ற இந்த ஆய்வில் இந்தி பகீர் தகவல் வந்திருக்கிறது.
இணைய தளத்தில் சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு மரியாதை கொடுக்கின்றனர் மற்றும் இணைய தளத்தை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் போது அதைப் பெற்றோர்கள் எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்று ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இணைய தளத்தில் சிறுவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது அனைவருடைய கடமையாகும். குறிப்பாக பெற்றோர், ஆசியரியர்கள், கல்வியாளர்கள், பயற்சியாளர்கள், அரசாங்கம் மற்றும் குழந்தைகள் போன்றோர் குழந்தைகளை சரியான முறையில் இணைய தளத்தைப் பயன்படுத்த பழக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட்டின் இயக்குனர் ஜாக்குலின் பயக்கீர் கூறுகிறார்.

கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?


கிரெடிட் கார்டு வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிய பலரும் இன்றைக்கு அதை தலையை சுற்றி தூரப்போடும் வேலையை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதோ சூனியத் தகட்டினை வாங்கிவிட்டோமோ என்று அஞ்சும் சூழ்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் எந்த ஒரு பொருளையுமே நமக்கு ஏற்றதாக பயன்படுத்தினால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறும் நிபுணர்கள் கிரெடிட் கார்டில் உள்ள நன்மை, தீமைகளை பட்டியலிட்டுள்ளனர்.
கிரெடிட் கார்டு ஜாக்கிரதை
கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப்போல சுமார் நான்கு மடங்கும், பெர்சனல் லோனைப்போல சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம் என்கிற அளவில் இருக்கும்.
கிரெடிட் கார்டுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கும்.
கிரெடிட் கார்டு கடன்களை ரொக்கமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி மூலமே கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
கிரெடிட் கார்டு நல்லதிற்கே
கிரெடிட் கார்டு மூலம் அவசரத்தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பெர்சனல் லோனை விட வட்டி அதிகம்.
கிரெடிட் கார்டு மூலம் இன்சூரன்ஸ் பிரீமியம், தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போன்றவை இருக்கின்றன. இவை கட்டுவதற்கு பரிமாற்றக் கட்டணம் எதுவும் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு செயல்படவும்.
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு 45 முதல் 51 நாட்கள் வரை வட்டி கட்ட வேண்டியதில்லை.
ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் ஒரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்கு கிடைக்கும் சலுகைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் வட்டியே இல்லாமல் ஊரார் பணத்தில் ஈஸியாக பல பொருட்களை வாங்கலாம்.
அதேபோல் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால், ரிவார்டு புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.
ஆனால் எந்த நேரத்திலும் பின்னால் வரப்போகிற பணத்தை நம்பி கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள் அதுவே ஆபத்தாகிவிடும்.

English summary
Credit cards are quick and easy to use, even if you are abroad. You can access finance up to your credit limit at any time, making them very useful for dealing with unexpected costs. Most credit cards have relatively high rates of interest compared to loans and other finance; this means that if you allow interest to accrue the cost of using credit cards can be very high.

Source: 
goodreturns.in

போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை போக்கு வரத்து காவல்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின் சீரியல் எண்ணை அவர்கள் பணியின் போது வைத்திருக்கும்... நோட் புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை மனப்பாக்கம் அருகே போக்கு வரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த வழியாக செல்போனில் பேசிக் கொண்டு வந்த கார் டிரைவரை மடக்கினார்.

அந்த டிரைவரை பார்த்து செல்போன் பேசியபடி ஓட்டியதால் ரூ.1100 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அவர் காரின் பின் பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் சாரிடம் பேசுங்கள் என்று கூறியதற்கு சாராக இருந்தாலும், மோராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஸ்பார்ட் பைன் ரூ.1100 கட்ட வேண்டும், இல்லை என்றால் என்னை கவனித்து விட்டு செல்லுங்கள் என்று கறாராக கூறினார்.

டிரைவருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை திறந்தார். அவரை பார்த்த போலீஸ் காரர் அதிர்ச்சி அடைந்து வணக்கத்தை தெரிவித்தார். காரில் வந்தது சென்னை காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு பணிபுரியும் உயர் அதிகாரி.

அந்த அதிகாரி போலீஸ்காரரை பார்த்து உன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை எடுங்கள் என்று கூறிய போது, பாக்கெட்டில் அவர் ரூ.1000 வைத்திருந்தார். ஏது இவ்வளவு பணம் என்று கேட்ட போது அவர் ஆடிப் போனார். உடனே காரில் வந்த அதிகாரி, போக்குவரத்து போலீசார் யாரும் ஒழுங்காக பணி செய்வதில்லை என்றும் கலெக்ஷன் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு காரில் சென்று விட்டார். அந்த செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கண்டிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் தான் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணிக்கு வந்து பிறகு வீட்டிற்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல பணத்தை கொண்டு வந்தாலும் அதிகாரிகள் சோதனையின் போது மாட்டிக் கொண்டால் உள்ளதும் போய்விடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து வருகிறார்கள்.

காவல் துறையில் ஒரு சிலர் செய்யும் தவறினால் அனைவருக்கும் களங்கமும், பாதிப்பும் ஏற்படுவதாக நேர்மையான போலீசாரும் புலம் புகிறார்கள்.

இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு?


கும்பலே இல்லாத கூடங்குளம்-இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு? ஏன் கிராமம் கிராமமாக, வீடு வீடாக தேடுதல் வேட்டை? பதுங்கி இருக்கும் ஒசாமா பின் லேடனைத் தேடுவது போல ஒரு அதிபயங்கரச் சூழல் ஏன் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

எதேச்சாதிகார அராஜக அரசியல் நடக்கிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதை பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இதை எதிர்க்க வேண்டும். மக்களாட்சி மரபுகளை மதிப்பவர்கள் போலீஸ் முற்றுகையை அகற்றக் கோர வேண்டும். மக்கள் நலத்தில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் இதை வன்மையாக எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்!




சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் !


படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!.

நன்றி: சசிதரன்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More