நண்பர்களே இலங்கை அரசின் மாபெரும் இன படுகொலைகளை இந்தியாவின் எந்த ஒரு வட இந்திய தொலைகாட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், ஏன் தென் இந்திய தொலைகாட்சிகளும் கூட (தமிழன், மக்கள் தொலைகாட்சிகளை தவிர) இன்றைய நிலையிலும் பொருட்படுத்தாத ஒரு நிலையில். இலங்கை இனப் படுகொலை - சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் டுடே கீழ்க்கண்ட நாட்களில் 3 பகுதிகளாக ஒலிபரப்ப இருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு விலை கொடுத்து அவர்களை சேனல் 4 லிருந்து வாங்க வைத்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு செய்தியும் மாநிலம் தாண்டி நேஷனல் மீடியாவில் ஒலிபரப்பாகுவரை அந்தச் செய்திக்கான தாக்கம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இருப்பதில்லை என்கிற யதார்த்த நிலையை நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஏற்கனவே பார்த்தவர்களும் இதுவரைப் பார்க்காதவர்களும் தயவுச்செய்து நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் மேன்மேலும் பிற தொலைக்காட்சிகளும் இச்சம்பவத்தை முன்னெடுத்து செல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
கனத்த இதயத்துடன் நாம் பார்க்க வேண்டிய நேரம்
07 July 11 - 10 PM
08 July 11 - 11 PM
09 July 11 - 10 PM
எனவே அனைவரும் காணொளியை பாருங்கள்
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்...


