Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது,


இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.


தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை.


அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.


இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம்.


தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.


இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும்.


ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்.


இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.

தமிழீழம், இலங்கை செய்திகள், திமிழ் செய்திகள், செய்திகள்

இந்திய கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைக்கு கரிசனம் காட்டுகிறது சீனா:அமெரிக்க செனட்

இந்திய கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் உள்நோக்கத்துடன் இலங்கைக்கு, கடந்த 2005ம் ஆண்டில் இருந்து சீனா உதவி வருவதாக அமெரிக்க செனட் சபைக்கு அளித்த அறிக்கையில் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் தென் கடல் பகுதியில் இருந்து மியான்மர், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, மொரீசியஸ், பாகிஸ்தான் என கடல் மார்க்கமாக நெருங்கி வந்து, இந்தியாவின் வடக்கில் உள்ள கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவே சீனா உள்நோக்கத்துடன், தந்திரத்துடன் செயல்படுவதாக அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகவும், இலங்கை பற்றி அமெரிக்க செனட் சபைக்கு அளித்த எட்டு பக்க அறிக்கையில் வல்லுனர்கள் கூறியிருப்பதாவது:"ஸ்டிரிங் ஆப் பேர்ல்ஸ்' என்றழைக்கப்படும் இந்நாடுகளின் கடல் பகுதிகளில் துறைமுகம் மற்றும் விமானப்படை தளம் அமைப்பது, ராணுவத்தை நவீனப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்நாடுகளுடனான உறவுகளை சீனா பலப்படுத்தி வருகிறது. இந்திய கடல் பகுதியில், துறைமுகம் கட்டுவதற்கு, சீனா திட்டமிட்டு வருவது பற்றி, இந்திய பாதுகாப்பு துறை திட்ட மதிப்பீட்டாளர்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர்.இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஹம்பன்டோடா என்ற இடத்தில் துறைமுகம் கட்டுவதற்கு, சீனா முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் குவாடர், வங்கதேசத்தில் சிட்டகாங்க், பர்மாவில் சித்வே ஆகிய இடங்களில் துறைமுகங்கள் கட்ட சீனா உதவி உள்ளது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை கடந்த 2009ம் ஆண்டில் நிறுத்தும்படி, மேற்கத்திய நாடுகள் கட்டாயப்படுத்தியதால் இலங்கை அரசு அப்போது பதட்டமடைந்தது.போரில் ராணுவத்தை எப்படி கொடுமையான முறையில் பயன்படுத்தி வெற்றி கொள்வது என்பது பற்றிய பயிற்சியும், இலங்கை ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளை வெற்றி கண்டதால், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு அந்நாட்டு அரசு மற்றும் சிங்கள மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.


விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்டப் போரின் போது, தமிழர்களை, இலங்கை ராணுவம் கையாண்ட விதம் சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லை.இலங்கையில் போர் குற்றங்கள் நடந்தது தொடர்பாக சர்வதேச குற்றவியல் கோர்ட் விசாரிக்க வேண்டுமானால், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலின் ஒப்புதல் வேண்டும். இக்கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாக ரஷ்யா மற்றும் சீனா உள்ளன. இவை இரண்டும் இலங்கையின் நட்பு நாடுகள் என்பதால், இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்கள்.அதேசமயம், ஐ.நா., மற்றும் சர்வதேச நாடுகள் போர் குற்றம் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தினால், இது சிங்களர்களிடம் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More