மாத்தியோசி - சிறுகதை

வரிசையாக உள்ள பத்து வீடுகளுக்கு மத்தியில் உள்ளதுதான் மதுபாலன் வீடு.

ஒரு நாள் நள்ளிரவில் அவரது வீட்டில் திருடன் புகுந்து கத்தியைக் காட்டி பீரோவைத் திறக்கச் சொல்லி மிரட்டவே, அவனை இடித்துக் தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு “” தீ … தீ… ஓடிவாங்க!” என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்தனர்.

“”திருடன்னு கத்த வேண்டியதுதானே!” என்று மதுபாலனின் மனைவி கேட்கவே, “”திருடன்னு சத்தம் போட்டா யாருமே பயந்துகிட்டு வெளியே வரமாட்டாங்க. ஆனா “தீ… தீ…ன்னு’சத்தம் கேட்டவுடனே எங்க நம்ம வீட்டுக்கும் “தீ’ பரவிவிடுமோன்னு பயத்துல எல்லாரும் ஓடிவந்திட்டாங்களே!” என்று கூறிய கணவனின் சமயோசித புத்தியை நினைத்து பெருமைப்பட்டாள்.


மு.சிவசுப்பிரமணியன்

நன்றி; குமுதம்

1 comments:

அருமையான கதை .அவனின் சமயோசித புத்தி பாராட்ட தக்கது.அருமை நண்பரே

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More