அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருந்து சோதனை: 12 பேர் பலியானதாக தகவல்!

மனிதர்களை கினியா பன்றிகளைப் போல மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு வந்த ஏழை நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடத்தியதில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மருந்து பரிசோதனை நடத்தப்பட்ட 279 நோயாளிகளில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரின்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

12 பேர் மருந்து அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலியானதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் இலவச சிகிட்சைக்காக மருத்துவமனையில் அபயம் தேடிய அப்பாவி ஏழைகள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுவிற்கு பதிலாக கிடைத்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை மருந்து பரிசோதனைக்கு மருத்துவமனை அதிகாரிகள் உட்படுத்தியதாகவும் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியதாகவும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதியுறும் ராமதர் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மருந்தை தந்தனர். பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் வாசிக்க தெரியவில்லை” என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

தனது கணவரை மருத்துவமனை அதிகாரிகள் தவறான மருந்தை கொடுத்து கொலைச் செய்ததாக போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டு இன்னொரு நபரான சங்கர்லாலில் மனைவி லட்சுமி பாயீ குற்றம் சாட்டுகிறார்.

உயிர்பிழைக்க மாட்டார்கள் என உறுதியான நோயாளிகளிடம் மருத்துவர்கள் மருந்து சோதனை நடத்தியதாகவும், ஒவ்வொரு நோயாளியிடமும் சோதனை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மருந்து கம்பெனிகள் பணம் அளிக்கின்றனர் என சமூக ஆர்வலர் ரசனா தின்கரா கூறுகிறார்.

அதேவேளையில் மருந்து பரிசோதனை குறித்து பல்வேறு ஏஜன்சிகள் மாறுபட்ட புள்ளிவிபரங்களை அளித்துள்ளன. செண்ட்ரல் க்ரேடு ஸ்டாண்டர்டு ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) புள்ளிவிபரப்படி போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரில்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) 7 மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை ஆவணங்களில் 10 சோதனைகள் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது. 13 சோதனைகள் நடத்தப்பட்டதாக மருந்து கம்பெனிகள் அமெரிக்க அரசுக்கு அளித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொத்தம் 3 பரிசோதனைகள் மட்டுமே பி.எம்.ஹெச்.ஆர்.சியில் நடந்ததாக ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா(டி.சி.ஜி.ஐ) கூறுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஹெல்த் ரிசர்ச் பிரிவு செயலாளர் டாக்டர் வி.எம்.கட்டக் தெரிவித்துள்ளார். மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை கினியா பன்றிகளைப் போல உபயோகிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச பா.ஜ.க அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இந்தியாவில் ஏழை மக்களிடம் மருந்து கம்பெனிகள் பெருமளவில் மருந்து பரிசோதனை நடத்துவதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான விசாரணையின் போது ஏழு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு?

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? அதற்கு எவ்வளவு வட்டி? கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? பாக்கி கடன் எவ்வளவு உள்ளது? குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா? வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா? எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

பெங்களூர் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மாற்றான்... சுட்ட படமா, சுடாத படமா...?


ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.
அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.
அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!
மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.
இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.
.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!

வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை

நமக்குச் சொந்தமான கச்சதீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல், மத்திய அரசு விழிக்கிறது. வல்லரசு கனவு காணும் இந்தியா, தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் பழிக்காதா?


கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாக 75 கோடி அமெரிக்க டொலர்களும் (சுமார் ரூ. 4,125 கோடி), நிதி உதவியாக 35 கோடி அமெரிக்க டொலர்களும் (ரூ. 1,925 கோடி) தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு விலைதான் இந்திய மீனவர்களின் உயிரும், உடைமையுமா? தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?'

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது | Hubble Discovers a Fifth Moon Orbiting Pluto

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட  பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது.

NASA வின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பயன்படுத்தி வானியல் குழு பனிக்கட்டி குள்ள கிரகமான ப்ளூட்டோவை சுற்றிவரும் மற்றொரு நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன்மூலம் ப்ளூட்டோவை சுற்றிவரும் நிலவுகளின் எண்ணிக்கை நாளிலிருந்து ஐந்தாக உயர்ந்திரிக்கிறது.

This image, taken by NASA's Hubble Space Telescope, shows five moons orbiting the distant, icy dwarf planet Pluto. The green circle marks the newly discovered moon, designated P5, as photographed by Hubble's Wide Field Camera 3 on July 7. The observations will help scientists in their planning for the July 2015 flyby of Pluto by NASA's New Horizons spacecraft. P4 was uncovered in Hubble imagery in 2011. (Credit: NASA; ESA; M. Showalter, SETI Institute)
மேலும் விவரங்களுக்கு:  http://www.nasa.gov/mission_pages/hubble/science/new-pluto-moon.html

டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!




நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
"பிரதமர்தான் மாண்ணுனு பார்த்த, காங்கிரஸ் கட்சில இருக்குற எல்லாருமே?"
English summary
When did US-based Time Magazine become a part of the Times of India Group of publications? Tamil Nadu Youth Congress activists who appear to be under the impression that the US publication is part of the Times group, tore up copies of the newspaper during a protest against a Time magazine report which carried a photograph of Prime Minister Manmohan Singh labeled "Underachiever". Although they were informed by mediapersons that Time was not part of the Times group, the protestors went ahead and damaged copies of the newspaper outside the American Consulate.
Source: oneindia.in

விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா? சிவகங்கை சின்னபையன் - Chidhambaram Slams Common Man


செய்தி:
"பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

வாசகர்கள் கருத்து:

சிவகங்கை சின்னபையன் என்று கருணாநிதி சிதம்பரத்தை பார்த்து அந்நாளில் சொல்வார். அது சரியாக போய் விட்டது. சின்ன பையன் போலதான் பேச்சு உள்ளது. குடி தண்ணீர் நன்றாக இருந்தால் நடுத்தர மக்கள் ஏன் பதினைந்து ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் வாங்க போகிறார்கள். நீங்க கொடுக்கும் தண்ணீரை குடித்தால் டாக்டருக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் தான் நீரை காசு கொடுத்து வாங்குகிறார்கள். அதுவும் எல்லா மத்தியதர மக்களும் வாங்குவதில்லை. அவரிகளிடம் எங்கே வசதி உள்ளது. ஆகவே நீரை காய்ச்சி பாட்டிலில் போட்டு குழந்தைகளுக்க்கு கொடுக்கிறார்கள். இதை போய் கிண்டல் செய்கிறாரே சிதம்பரம் இவர் உண்மையிலேயே சின்ன பையன் தான். ஒரு ரூபாய் அரிசி விலை ஏற்றினால் அந்த தொகை ஒரு ரூபாய் உற்பத்தியாளருக்கு போய் சேருகிறது என்று எந்த மடையன் சொன்னான்? விவசாயியை போய் கேளுங்கள்? அவர்கள் சொல்லுவார்கள். கொள் முதல் விலை கிடைக்கவில்லை என்று அழுகிறார்கள் அவர்கள். அந்த கணக்கும் சரியில்லை சின்னபையனே? நடுத்தர மக்களை விரோதித்து கொண்டு எந்த அரசியல்வாதியும் வெற்றி பெற்றதில்லை சின்னபையனே? பிரதமரை அமெரிக்க டைம் பத்திரிகை கிழி கிழி என்று குற்றம் சாட்டி யுள்ளார்கள் அதை கண்டிக்கவேண்டும், மேலும் மன்மோகன் சிங்கை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் அதற்குபல வழிகள் உள்ளன. அதை விட்டு நடுத்தர மக்களிடம் விளையாடாதீர்கள்? . மேலும் உங்களிடம் நிதி அமைச்சகம் வேறு கொடுக்க போகிறார் பிரதமர். நீங்கள் அவரை காக்கா பிடிப்பதற்கு பரிசாக. அடுத்த தேர்தலில் நடுத்தர மக்களிடம் வோட்டு பிச்சைக்கு நீங்கள் வந்தாக வேண்டும் ஜாக்கிரதை கடந்த தேர்தலில் கருணாநிதி துணையுடன் fraud தில்லு முல்லு பண்ணியதைப்போல இப்போது செய்ய முடியாது .


அறுபது வருடமாக அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் எதுவுமே தன்னிறைவு அடையாதததை நினைக்க துப்பில்லை....ஊழலை கட்டுபடுத்த வக்கில்லை......அரசாங்கத்தை செம்மையாக,ஊழலற்ற,வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க எண்ணம் இல்லை......ஆனால் விலை ஏற்றத்திற்கு மட்டும் ஒப்பீடு செய்வது குறையவில்லை......விவசாயிகள் பயன் பெரும் வகையில் கொள்முதல் விலை ஏற்றுவதை யாரும் குறை கூற வில்லை.....ஆனால் அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை பாதுகாக்க துப்பில்லாமால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை தான் என்ன ????இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தை கடுமையாக குறை கூறி குட்டியதை வசதியாக மறந்து விட்டதன் மர்மம் என்ன????? வாயிக்கு வந்தது வார்த்தை என்று எதை வேண்டமானாலும் பேசுவது....பின் எதிர்ப்பு கிளம்பியதுவுடன் மன்னிப்பு கோர வேண்டியது.......சமீப காலமாக மத்திய அரசில் பங்கு பெரும் தமிழகத்தை சார்ந்த அமைச்சர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பதோடு அல்லாமல் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளாகி தமிழகத்தின் கெளரவம் ,மற்றும் கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டார்கள்......அதில்இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது..... இவர் பேசும் தகுதியை இழந்துவிட்டார்......இப்படி பட்டவர் விலை ஏற்றதை பற்றி கூறுவது மகா கேவலமானது.....

செட்டிநாட்டு அரசருக்கு சாதாரண மக்களின் கஷ்டம் எங்கே புரிய போகிறது.மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தி உள்ளார் இந்த சிதம்பரம்.உங்கள் ஆட்சி இருக்கும் வரை என்ன பேச முடியுமோ பேசவும் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கும்.





English summary:
Union home minister P Chidambaram chided the urban middle class for bemoaning soaring prices of fuel and essential commodities. "There's steady rise in the minimum support price of paddy, wheat and sugarcane , reflected in the prices of commodities . When the urban middle class can buy a bottle of mineral water for Rs 15 and icecream for Rs 20, why do they make so much noise about price rise?" said Chidambaram. Trying to justify increase in prices, Chidambaram said, "The rise has directly benefited farmers. We raised fuel prices because the global crude prices had gone up. We also gave relief by bringing down the petrol price twice. There needn't be any complaint for price rise when things are on the side of poor farmers."

Thanks: One india

கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்? - Tamil Pregnancy / Parenting


கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.
4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.
எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.



Pregnancy Calculator Week by Week blog provides about Signs and Symptoms of Early Pregnancy, Tips for healthy pregnancy, Monthly pregnancy and A2Z about pregnancy. For More Information Visit http://pregnancycalculator-a2z.blogspot.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More