வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை

நமக்குச் சொந்தமான கச்சதீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல், மத்திய அரசு விழிக்கிறது. வல்லரசு கனவு காணும் இந்தியா, தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் பழிக்காதா?


கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாக 75 கோடி அமெரிக்க டொலர்களும் (சுமார் ரூ. 4,125 கோடி), நிதி உதவியாக 35 கோடி அமெரிக்க டொலர்களும் (ரூ. 1,925 கோடி) தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு விலைதான் இந்திய மீனவர்களின் உயிரும், உடைமையுமா? தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?'

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More