யாரை இடைநீக்கம் செய்கிறாய் பராசக்தி பாணியில் சீறுகிறார் விஜயகாந்த்!!!

இந்த சட்டசபை விசித்திரம் நிறைந்த பல மனிதர்களை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே சட்டசபை விசித்திரமல்ல, பேச போகும் நான் புதுமையான மனிதனுமல்ல. ஆண்டாள் மண்டபத்திலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

சட்டசபையில் குழப்பம் விளைவித்தேன். அதிமுக உறுபினர்களை தாக்க முயற்சித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. சட்டசபையில் குழப்பம் விளைவித்தேன். சட்டசபை என்பதற்காக அல்ல. சட்டசபை அதிமுக கோமாளிகளின் கூடாரமாய் மாறிவிட கூடாது என்பதற்காக. அதிமுக உறுப்பினர்களை தாக்க முயற்சித்தேன். அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக அல்ல. அந்த நல்லவர்கள் வேஷம் பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, தமிழகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது

தமிழ்நாட்டிலே மதுரையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை! அது உடம்பை வளர்த்தது. என்னை சினிமாகாரனாக ஆக்கியது. மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ என் எதிரிலே உங்கள் முன் அமர்ந்து இருகிராளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். ஆறு மாதம் பேசமுடியாமல் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
இன்று அவையிலே கோபம் வந்தது சீறிவிட்டேன்.
எல்லாவற்றிக்கும் யார் காரணம் நானா காரணம்
இல்லை இல்லை இல்லவேயில்லை,
பால் விலையை உயர்த்துவோம்
பயண கட்டணத்தை உயர்த்துவோம்
இருந்தும் வெற்றிபெறுவோம் என்று
மக்களை முட்டாள்கள் என்றுநினைத்து
சூளுரைத்தாலே ஆணவக்காரி
ஜெயலலிதா அவள்தான் காரணம்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More