சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! - என்ன கொடும சார் இது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் "அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.," என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான். இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே. சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான். தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன கொடும சார் இது?

அடுத்த தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் நான்தான் என்ற நிலைமை முடிந்து.. அடுத்த MGR நான்தான் என்று சொல்ல ஆரமித்துவிட்டனர்...

நன் TR இன் ரசிகன் அவரின் பேச்சை விரும்பி கேட்பேன் இது சினிமா... நன் புரட்ட்சிதலைவர் MRG இன் தீவிர வெறியன் வாழ்க்கையில். அவர் செய்த தொண்டுகள் பல...

நான் TR இடம் சில கேள்விகள் கேட்கிறேன்...

சிலம்பரசன் நல்ல நடிகரா? நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்டு சினிமா துறையில் நல்ல நிலையில் இருக்கிறாரா? அல்லது ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து விட்டாரா? இல்லை இருபத்திஐந்து படங்களாவது நடித்து விட்டாரா (கதாநயாகனாக)? இதில் எதுவுமும் இல்லை... உங்கள் மகனை நீங்கள் எப்படிவேண்டுமானாலும் நினைத்து பார்க்கலாம் அது ஒரு தகப்பனின் ஆசை... ஆனால் மக்கள் மத்தியில் நீங்கள் பேசும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? ரஜினி, கமல், விக்ரம் ஆகியோரை பார்த்து திருந்த வேண்டாமா? இது மக்கள் மத்தியில் சிரிப்பையும் வெறுப்பையும் உண்டாக்க கூடிய ஒரு செயல் அல்லவா? சிம்பு என்பவன் யார்? அவன் இப்போது தமிழ் சினிமாவில் எந்த நிலையில் உள்ளார்? பொது வாழ்கையில் எந்த நிலையில் உள்ளார் (குறிப்பாக பெண்கள் மத்தியில்)? இதை உங்கள் மனதிற்குள் நீங்கள் கேட்கவேண்டாம?


1 comments:

விடுங்க பாஸ் இதெல்லாம் சீரியஸா எடுத்துக்க கூடாது ..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More