இந்தோனேஷியாவில் மவுண்ட் லோகன் எரிமலை வெடிப்பு

இந்தோனேஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக சீறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது.


இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது. 1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில தினங்களாக சீறிக் கொண்டிருந்தது.

எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு அந்த எரிமலை வெடித்து சிதறியது.

அதிலிருந்து பாறைகள், நெருப்பு குளம்புகள், மணல், புகை, சாம்பல் போன்றவை வெளியேறி, சுமார் 500 மீட்டர் உயரத்துக்கு வானில் பரவியது.

முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இப்பகுதியில் வசித்த 28 ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More