தமிழ் ஈழம் உருவாக்கக் கோரி வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர்

தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. அவை கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.

எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்;

இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் வைகோ.

2 comments:

எல்லாம் அரசியல்
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

ஒன்றும் வேணாம் இருக்கிற நாட்டில ஒழுங்காக வாழ வைச்சாவே போதும்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More