அன்புச்சிறை! - நகைச்சுவை கதை

“என்னங்க அழறிங்க?”

“இது நமது ஐம்பதாவது திருமண நாள்!”
“அதுக்காக..அழணுமா?
“உணர்ச்சிவசப்படறேன்…அவ்வளவுதான்!”
“ஓ அப்படியா?”
“ஐம்பதாண்டுக் காலமா உன்னுடைய அன்புச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கிறேன்!”

”திடீர்னு ஏன் சிறை உதாரணம் ஞாபகத்துக்கு வருது!”
”இப்பதான் பேப்பர்லே படிச்சேன். இங்கிலாந்துல மிதக்கும்
சிறைச்சாலைகள் வரப்போகுதாம்!”

அது எப்படி?

”உபயோகப்படாத போர் விமானம் தாங்கிக்கப்பலை
சிறைச்சாலையா மாற்றலாமான்னு பார்க்கறாங்களாம்!”
”எதுக்காக அப்படி?”
”இட நெருக்கடி…அதே நேரம் கைதிகளின் எண்ணிக்கை அதிகம்…
என்ன பண்றது…அதனால கப்பல்ல கைதிகளை வச்சுடறதுன்னு
முடிவு பண்றாங்க”

”எவ்வளவு பேரை அடைக்க முடியும் அதுல?”
”1500 பேர் வரைக்கும் அதுல இருக்க முடியுமாம்!”
”கைதிகள் சுலபமா தப்பிக்க முடியாது!”
”என்னை மாதிரி!”
”என்ன சொல்றீங்க?”

”உனக்கு ஞாபகம் இருக்கா…50 வருஷத்துக்கு முன்னாடி நீயும்
நானும் ஒரு குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்தப்போ,
உங்கப்பா நம்மை கையும் களவுமா பிடிச்சுட்டார்…
அப்போ அவர் என்ன சொன்னார்…’’மரியாதையா என் மகளைக்
கல்யாணம் பண்ணிக்கோ! இல்லேன்னா உன்னை 50 வருஷம் உள்ளே
தள்ளிப்புடுவேன்….கல்யாணமா…ஜெயிலா இப்பவே முடிவு
பண்ணிக்கோ’’ன்னார்

நான்…உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்…
அது…அது…அதனால…”

என்ன இது மறுபடியும் அழறீங்க…?

அது வந்து ஒண்ணுமில்ல… அன்றைக்கு நான் ஜெயில்னு முடிவு
எடுத்திருந்தா இன்றைக்கு நான் விடுதலை ஆயிருப்பேன்.
இல்லையா…அதை நினைச்சுப் பார்த்தேன்!


நன்றி
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More