பன்னி கூட சிங்கிளாக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால் சிங்கம் சிங்கிளாக வர வாய்ப்பில்லை

சிங்கம் மற்றும் புலிகளின் குணாதிசய ஒப்பீடு (பல இணைய தளங்களில் சுட்டது)

சிங்கம் என்றும் தனியாக வேட்டைக்கு போகாது, கூட்டமாகவே செல்லும்.. 
புலி தனியாகவே வேட்டைக்கு செல்ல விரும்பும்

சிங்க குட்டிக்கு மூத்த சிங்கம் ஏதாவது வேட்டையாட சொல்லி கொடுத்தால்தான் வேட்டையாடும்.. 
ஆனால் புலிக்குட்டியை சில நாட்களிலேயே மூத்த புலிகள் தனியாக விட்டுவிடும், வேட்டையாடும் இயல்பு புலிகளுக்கு இயல்பாகவே அமைந்தது

ஆண் சிங்கம் சோம்பேறி, பெண் சிங்கம் வேட்டையாடும் உணவை ஆண் சிங்கம் உண்ணும்,.. 
புலிகளில் புலிக்குட்டி, ஆண் புலி, பெண் புலி என அவைகளுக்கு ஏற்ற உணவை அவைகளே தேடி கொள்ளும்

சிங்கங்கள் தனக்குள்ளே அடித்து கொண்டாலும், வேறு மிருகங்கள் வரும் போது ஒற்றுமையுடன் இருக்கும்.. 
புலிகள் ஒன்றாக இருக்க விரும்புவதில்லை, தனிமையையே பெரும்பாலும் விரும்பும்

சிங்கம் "இடம் சாரா உயிரினம்" என்று அழைக்கப்படும், பல இடங்களில் சென்று அதன் ஆட்சியை செலுத்தும்..
புலி "இடம் சார்ந்த உயிரினம்" என்று அழைக்கப்படும், தான் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் செல்ல விரும்பாது, மற்ற இடங்களில் ஆட்சி செலுத்தவும் விரும்பாது, 

சிங்கங்கள் இறந்த உணவை நெடு நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் உடையது, சிங்கத்திற்கு பசிக்காவிட்டாலும் உணவை வேட்டையாடி சேமித்து வைத்து கொள்ளும்.. 
புலிகளுக்கு பசிக்கும் போது மட்டுமே வேட்டையாடும் எண்ணம வரும், வேட்டையாடிய உணவு மீதமைடைந்தால் அப்படியே விட்டுவிட்டு சென்று விடும், அடுத்த வேளைக்கு வைத்து கொள்ளாது..

சிங்கமும் புலியும் ஒன்று சேர ஒரே இடத்தில் வாழ விரும்பாதவை, இரண்டையும் சேர்ந்து பார்ப்பது மிக மிக அரிது

நாற்பது யானைகள் வந்தாலும் சிங்கம் தனியாக எதிர்த்து நிற்காது, நான்கு நரிகள் வந்தாலே எதிர்க்க தயங்கும்


நன்றி: Agazhvaan GGanesh

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More